Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி பிரம்மோற்சவம் 2021: அக் 7ல் கொடியேற்றம் 11ல் கருடவாகன சேவை - மாட வீதி உலா ரத்து

திருமலை ஏழுமலையான் கோவிலில் வரும் 7ஆம் தேதி பிரம்மோற்சவம் தொடங்குகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வாகன சேவைகள் ரத்து செய்யப்படுகின்றது. கோயிலுக்குள்ளேயே காலையும், மாலையும் அந்தந்த வாகனங்களில் உற்சவ மூர்த்தி

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மலையப்பசாமி வாகன வீதி உலா ரத்து செய்யப்படுவதாகவும் கோயிலுக்குள்ளேயே காலையும், மாலையும் அந்தந்த வாகனங்களில் எழுந்தருளும் ஏகாந்த சேவை நடைபெறும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நடத்தப்படும். ஏழு கொண்டல வாடா கோவிந்தா... கோவிந்தா... ஸ்ரீனிவாச கோவிந்தா வெங்கட ரமணா கோவிந்தா என்ற முழக்கம் எதிரொலிக்க திருமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவைக் காண லட்சக்கணக்காக பக்தர்கள் வருகை தருவார்கள்.

Tirupathi Brahmotsavam 2021 to begins on 7th October 2021 with flag hoisting

பிரம்மாவும் சிவனும் இணைந்து திருமலை ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவ விழா நடத்தினர் என்பது புராண கதை.
திருப்பதியில் பல ஆண்டுகாலமாக பிரம்மோற்சவம் பிரம்மாண்டமாகவே நடைபெற்று வந்துள்ளது.மன்னர் ஆட்சி, நவாப், ஆங்கிலேயர்கள் ஆட்சி, சுதந்திரத்திற்குப் பின் என எப்போதுமே வழக்கமான பிரம்மாண்டத்துடன் பிரம்மோற்சவம் நடைபெற்றுள்ளது.

பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மூலவர் ஏழுமலையானையும் உற்சவர் மலையப்பசுவாமி மாட வீதிகளில் உலா வருவதையும் பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.

கொரோனா வைரஸ் பரவல் அனைத்தையும் முடக்கி போட்டு விட்டது. கடந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் மலையப்பசுவாமி மாட வீதிகளில் வலம் வரவில்லை மாறாக ஏகாந்தமாக பிரம்மோற்சவம் நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக, மத்திய, மாநில அரசுகளின் நிபந்தனைகளின்படி பிரம்மோற்சவ விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன சேவைகளை ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரம்மோற்சவத்தை பக்தர்கள் இன்றி ஏகாந்தமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவ விழா வரும் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றிரவு பெரிய வாகன சேவையும் நடைபெறும். இதில் முக்கிய வாகன சேவைகளான கருட வாகன சேவை அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. 12ஆம் தேதி தங்க தேர்த்திருவிழாவும், 14ஆம் தேதி தேர்திருவிழாவும், நிறைவு நாளான 15ஆம் தேதி காலை சக்கர ஸ்நானமும் அன்று மாலை கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாவிஷ்ணுவின் வாகனம் கருடன். இந்த கருடவாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளுவது சிறப்பம்சம். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான திங்கட்கிழமை காலை மோகினி அலங்காரத்தில் இறைவன் எழுந்தருளுகிறார் அன்றிரவு கருடவாகன சேவை நடைபெறுகிறது. திருமால் சீனிவாசனாக திருப்பதியில் இருந்த பொழுது, தான் வைகுண்டத்தில் இருந்ததைப் போல இங்கும் இருக்க ஆசை கொண்டார். அதனை அறிந்த கருடன், வைகுண்டத்தில் இருக்கும் ஏழு மலையையும் பெயர்த்து எடுத்து திருப்பதியில் சேர்த்தார். அங்கு திருமால் சீனிவாசனாக குடியிருக்கிறார். தான் ஆசைப்பட்டதை செய்த கருடனை தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டார்.

இதனை நினைவு படுத்தும் விதமாக திருப்பதியில் கருட சேவை, பிரம்மோற்சவ திருவிழாவின் பொழுது நடத்தப்படுகிறது. நாக தோஷம் மற்றும் களத்திர தோஷம் உடையவர்கள் கருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளை தரிசிப்பதால், அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி சகலசெல்வங்களும் பெறுவார்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. கருட சேவையை தரிசிப்பதற்கு , மறைந்த முன்னோர்களான பித்ருக்களும் வருவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி பிரம்மோற்சவ விழாவின் 5ஆம் நாளன்று கருட வாகன சேவையில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+