விளம்பி தமிழ் வருட புத்தாண்டு 2018 -19: மேஷ ராசிக்காரர்களுக்கு அமோகம்
Recommended Video
விளம்பி வருடம் 14.4.2018 அன்று கிருஷ்ண பட்சம், திரயோதசி திதி, சனிக்கிழமை காலை 8.13 மணிக்கு உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறக்கிறது. ஹேவிளம்பி வருடத்தை விட விளம்பி வருடம் மக்களிடையே மகிழ்ச்சியையும் பணவரவையும் தருவதாக அமையும்.
புத்தாண்டு பிறக்கும் போது ரிஷப லக்னம் மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, துலாமில் குரு, தனுசு ராசியில் செவ்வாய் சனி, மகரத்தில் கேது, மீனம் ராசியில் சந்திரன், புதன் அமர்ந்துள்ளனர். சந்திரனும் புதனும் சேர்ந்திருந்தால், இந்திரனைப்போல் வாழ்வான்' என்று ஒரு பழம் பாடல் இருக்கிறது. புத்தாண்டு சந்திரனும் புதனும் இணைந்திருக்க பிறக்கிறது.
குருபகவானின் வீடான மீன ராசியிலும், சனிபகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதியிலும் இந்த ஆண்டு பிறப்பதால் சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடலாம். மேஷம் ராசிக்காரர்களுக்கு விளம்பி ஆண்டு எப்படி இருக்கும் என பார்க்கலாம்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்)
தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட மேஷ ராசிக்காரர்களே.... ராசிக்கு 12வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்க புத்தாண்டு பிறக்கிறது. சுப விரைய செலவுகள் அதிகரிக்கும் ஏற்கனவே வாங்கி போட்ட இடத்தில் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்ய வேண்டிய காலம் கனிந்து விட்டது. உங்கள் ராசிக்கு 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் குரு அமர்ந்துள்ளார்.
குரு அருள்
7வது பார்வையாக குரு உங்கள் ராசியை பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை என்பது உங்களுக்கு தெரியும். சித்திரை பிறப்பு யோக காலம்தான். தடை பட்ட திருமணம் கை கூடி வரும். மாணவ மாணவியருக்கு இது நல்ல காலம். மேற்படிப்பு படிக்க வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு வெளிநாடு செல்லக்கூடிய யோகம் கூடி வரும். திருமணம் முடிந்தவர்களுக்கு வளைகாப்பு நடத்தி குழந்தை பாக்கியம் கை கூடும் காலம் வந்து விட்டது.
சனி பகவான் சாதகம்
புரட்டாசி மாதம் 18ஆம் தேதி முதல் குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்திற்கு இடம்பெயர்கிறார். அஷ்டமத்தில் குரு அமர்வது நல்லதல்ல. பணம் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சனிபகவான் ஆண்டு முழுவதும் 9வது இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் பணவரவு அதிகரிக்கும்.
புது வீடு யோகம்
புது வருடம் பிறக்கும் போது ராகு கடகத்தில் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் இருக்கிறார். கேது மகரத்தில் 10வது வீட்டில் அமர்ந்துள்ளார். மாசி மாதம் அதாவது 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. ராகு மிதுனத்திற்கு மாறுகிறார். இது உங்களுக்கு 3ஆம் வீடு, கேது தனுசு ராசிக்கு மாறி உங்களுக்கு 9ஆம் வீட்டிலும் அமர்வதால், தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புது வீடு மாறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.
பணியிடத்தில் அமோகம்
குரு, சனி சாதகமாக இருப்பதால் பணியிடத்தில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும் அதிக வேலைப்பளுவையும் சமாளித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். சம்பள உயர்வு அதிகரிக்கும். சுக்கிரனால் கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பிரச்சினைகள் தீரும். சிலருக்கு பதவி உயர்வோடு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆஞ்சநேயர் வழிபாடு
சின்னச்சின்ன பிரச்சினைகளை எளிதாக சமாளிக்கலாம். உடன் பிறந்த சகோதரர்களுடன் சிறு சச்சரவுகள் ஏற்பட்டலாலும் சமாளிப்பீர்கள். நன்மைகள் நிறைந்த ஆண்டு இது. வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடலாம். ரோகிணி நட்சத்திரம், அஷ்டமி திதியில் ஸ்ரீகுருவாயூரப்பன் கோவிலுக்கு சென்று வணங்கி வர மேலும் நன்மைகள் நடக்கும்.
[மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம்]