Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு வேலையில் வரப்போகும் பெரிய ஆப்பு.. கோபத்தை கட்டுப்படுத்துங்க
அக்டோபர் மாத பலன்: அக்டோபர் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கன்னி ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் ஏற்படும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், அக்டோபர் மாதத்திலும் முக்கியமான கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறுகின்றன. கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

கன்னி
புரட்டாசி மாதம் வரை சூரியன் உங்கள் ராசியில் இருப்பதால் நரம்பு பிரச்சனை, கண்கள் பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், தொழில் மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்துவிதமான நல்ல மாற்றங்களும் உண்டாகும். மேலதிகாரிகள் விஷயத்தில் தர்க்கம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.
கோபம் வேண்டாம்
வியாபாரத்தில் கணக்கு வழக்குகள், ஜிஎஸ்டி போன்றவற்றை மிகவும் சரியாக வைத்துக் கொள்வது நல்லது. உங்களுடன் இருப்பவர்கள் தேவையில்லாத உபத்திரவத்தை கொடுப்பதற்கான வாய்ப்புள்ளதால். யாரிடமும் கோபப்படாமல் இருப்பது நன்மை பயக்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். அரசுக்கு, சட்டத்து உட்பட்ட விஷயங்களில் மட்டும் ஈடுபடுவது நல்லது.
சட்டவிரோத செயல்
சட்டத்திற்குப் புறம்பான எந்தவொரு விஷயங்களையும் செய்யாமல் இருப்பது நல்லது. இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் படிப்படியாக மாறும். இடமாற்றத்திற்கு உண்டான அதி அற்புதங்கள் ஏற்படும். வாழ்க்கையில் புத்துணர்ச்சியும், நம்பிக்கையும் உண்டாகும். மேலதிகாரிகளிடம் தர்க்கம் செய்து கொள்வது நமக்கு நாமே பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான சூழ்நிலை ஏற்படும்.
வேலை விடக் கூடாது
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்பட்ட பேப்பர் போடுவது, வேலையை விடுவது போன்றவற்றை செய்வது தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் நீண்ட நாட்களுக்கு வேலை இல்லாமல் தவிக்கக் கூடிய சூழலை உண்டாக்கி விடும். ரோஷப்படும் கன்னி ராசியினர் கண்டிப்பாக ஆபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் நிம்மதி கெடுவதற்கான வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மை பயக்கும்.
வழிபாடு
கோபத்தை மட்டும் கட்டுப்படுத்திக் கொண்டால் அனுகூலங்கள் ஏற்படும். எல்லா விதமான பாதிப்புகளில் இருந்தும் பாதுகாக்க கன்னி ராசிக்காரர்களுக்கு அனுமன் வழிபாடு, அனுமன் சாலிஷா கேட்பது நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications