எந்த டிகிரி படிச்சிருந்தாலும் ஓகே.. பாரத ஸ்டேட் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
சென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. . காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அந்தந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாமல் பயன்படுத்துங்கள்.
வேலை தரும் நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
பணி: அப்ரெண்டீஸ்
காலியிடங்கள்: 8,500
தமிழகத்தில் காலியிடங்கள் 470
உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.15,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,500, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.19,000 வழங்கப்படும்.
தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.10.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களை தவிர, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://nsdcindia.org/apprenticeship அல்லது https://apprenticeshipindia.org அல்லது http://bfsissc.com அல்லது https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/ போன்ற ஏதாவதொரு இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2020
மேலும் விரிவான விவரங்கள் அறிய பாரத ஸ்டேட் வங்கியில் இணைதளத்தை பாருங்கள்.