இந்திய விமானப்படையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு.. விண்ணப்பிக்க ரெடியா?
அக்னிவீரர் வாயு திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேர விரும்புவோர் விண்ணப்பம் செய்வதற்கான பதிவு தொடங்கி இருக்கிறது.
டெல்லி: இந்திய விமானப்படையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. அக்னிவீரர் வாயு திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேர விரும்புவோர் விண்ணப்பம் செய்வதற்கான பதிவு தொடங்கி இருக்கிறது. வருகிற 31-ந்தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் என விமான படை அறிவித்துள்ளது.
இந்திய விமானப்படையில் அக்னிவீரர் வாயு திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு நடக்கிறது. இதற்கு agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பப்பதிவு தொடங்கியது.
கடந்த 17-ந்தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற மார்ச் 31-ந்தேதி (மாலை 5 மணி வரை) விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும். இந்த தேர்வு மே மாதம் 20-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.

என்ன வயது
அக்னிவீரர் வாயு திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 17 ஆண்டுகள் 5 மாதங்கள் ஆகும். அதிகபட்சமாக 21 வயது உடையவர்கள் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். அதாவது, 2002-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி முதல் 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந்தேதி வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்தகுதியாக 10 மற்றும் 12-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

என்ன படிப்பு
கல்வித்தகுதி என்ன? டிப்ளமோ படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் உடன் பொறியியல் (மெக்கானிக்கல், எலக்டரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி) 3 வருட டிப்ளமோ படித்திருக்கவேண்டும்.

தொழில் படிப்பு
50 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்தும் தொழில்சார்ந்த பாடம் அல்லாத இயற்பியல் மற்றும் கணிதத்துடன் 2 ஆண்டு தொழில் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க அழைப்பு
இதேபோல, 10, 12-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் அல்லது குறைந்தபட்சம் 50 சதவீதம் மொத்தம் மற்றும் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஆங்கிலத்தில் 2 ஆண்டு தொழில் படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 31ம் தேதி ஆகும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications