தமிழகத்தில் மத்திய அரசு பணி! 12 முடித்திருந்தாலே போதும்! மாதம் ரூ.23,000 முதல் ரூ.78,000 வரை ஊதியம்
சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தென்மாநிலங்களில் காலி பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 12 ம் வகுப்பு முடித்தவர் விண்ணப்பித்து ரூ.23 ஆயிரம் முதல் ரூ.78 ஆயிரம் வரை மாத சம்பளமாக பெற முடியும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(ஐஓசிஎல்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா, கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதுபற்றிய அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் ஆபரேட்டர் (அவியேஷன்) Junior Operator (Aviation) பணியில் 39 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. தென்இந்தியாவில் உள்ள 4 மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 28 இடங்களும், கர்நாடகாவில் 6 இடங்களும், தெலங்கானாவில் 5 இடங்களும் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இந்த படிப்பை பொது, இடபிள்யூஎஸ் மற்றும் ஓபிசி பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களுடனும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு ஹெவி லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு- சம்பளம் எவ்வளவு?
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சம் 26 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.23 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.78 ஆயிரமும் சம்பளமாக கிடைக்கும். விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் திறமை, உடல்தகுதி தேர்வு மூலம் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பணிக்கு பொது, இடபிள்யூ மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு கட்டணம் கிடையாது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.iocl.com எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். இந்த இணையதளத்தில் Career s என்பதை கிளிக் செய்து வேலைக்கான அறிவிப்பை பார்த்து விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய ஜூலை 29ம் தேதி கடைசி நாளாகும்.
வேலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய் Click Here
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி முடித்தோருக்கு HCL-யில் வேலை.. மார்ச் 16ல் இண்டர்வியூ -
job: தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் வேலை வாய்ப்பு.. என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி!












Click it and Unblock the Notifications