அரசு பணிக்கு ‛‛தமிழ்’’ தேர்வு கட்டாயம்.. உதவி அறுவை சிகிச்சை நிபுணர் வேலை தொடர்பாக புதிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 1021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடம் நிரப்பப்பட உள்ள நிலையில் அவர்களுக்கு தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் எனவும், தமிழில் தேர்வு நடத்தப்படும் எனவும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.

மத்திய அரசு மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பணியிடங்களில் வெளிமாநிலத்தவர்கள் நியமனம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றனர்.

அதாவது தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான ரயில்வே, என்எல்சி, துறைமுகம், விமான நிலையங்கள் உள்பட பிற நிறுவனங்களில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகமான பணியமர்த்தப்படுவதாக சமீப காலமாக புகார் எழுந்துள்ளன.

தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க..

தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க..

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் வெளிமாநிலத்தவர்களை பணியமர்த்துவதுதன் மூலம் மத்திய அரசு தமிழர்களை புறக்கணிப்பதாக தமிழகத்தை ஆளும் கட்சி உள்பட பாஜகவுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட கட்சியை சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சில அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மருத்துவ தேர்வு வாரியம் அறிவிப்பு

மருத்துவ தேர்வு வாரியம் அறிவிப்பு


அதோடு தமிழ்நாட்டில் மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கே கிடைக்க மாநில அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை முற்றிலும் பின்பற்றுவதாக மத்திய இந்நிலையில்தான் தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் சார்பில் அதிரடியாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் தேர்ச்சி கட்டாயம்

தமிழ் தேர்ச்சி கட்டாயம்

அதன்படி உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு நிச்சயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். தமிழில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழக அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 1021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் தற்பாது தமிழ் தேர்ச்சி கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.

25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

இந்த பணி முழுவதும் தமிழர்களுக்கு கிடைக்கும் வகையிலும், இதில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் சேர்வதை தடுக்கும் வகையிலும் தான் இந்திய புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது என தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பு செய்துள்ளது. இந்த பணிக்கு வரும் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பதும், நவம்பர் மாதம் தேர்வு நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+