இந்திய ஐடி துறையில் இந்த நிதியாண்டில் 96000 வேலைவாய்ப்புகள்.. நாஸ்காம் தகவல்
பெங்களுரு : இந்த நிதியாண்டில் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் 96,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் புதிதாக ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்பட உள்ளதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் 30லட்சம் வேலைகளை குறைக்கப் போவதாக பாங்க் ஆப் அமெரிக்கா கூறியிருந்தது. இதன் மூலம் ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர் சம்பளத்தை பெரும்பாலும் சேமிக்க இந்திய ஐடி நிறுவனங்கள் சேமிக்க முடியும் என்றும் பாங்க் ஆப் அமெரிக்கா கூறியிருந்தது.

இந்த அறிக்கை வெளியான அடுத்த நாளே இந்த நிதியாண்டில் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் 96,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் புதிதாக ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்பட உள்ளதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பத்தின் பரிணாமம் மற்றும் அதிகரித்துவரும் ஆட்டோமேஷன் துறையில் திறமையான பணியாளர்கள், பாரம்பரிய ஐடி வேலைகள் மற்றும் புதுப்புது திறன் சார்ந்த பணியாளர்கள் 1,38,000 பேர் இந்த நிதியாண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த நிதியாண்டும் அதிகம் பேரை வேலைக்கு சேர்க்கப்பட உள்ளனர். டர்ப் 5 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் 96,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை அதன் பணியாளர்களில் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது
250,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை டிஜிட்டல் திறன்களை ஐடி நிறுவனங்கள் மேம்படுத்த முடிவு செய்துள்ளன. இதற்காக 40,000 க்கும் மேற்பட்ட புதிய டிஜிட்டல் பயிற்சியாளர்களை பணியமர்த்தியுள்ளன. இது தொழில் திறன்களை விரைவாக மேம்படுத்துவதற்காக நிறுவனங்களின் அர்ப்பணிப்பு மற்றும் முதலீட்டைக் குறிக்கிறது என நாஸ்காம் தனது அறிக்கையில் கூறியுள்ளது,












Click it and Unblock the Notifications