நம்ம மூஞ்சியா இப்படி இருக்கு? இதையெல்லாம் மாடு பார்த்தா ஆத்திரத்தில்.. இணையத்தை கலக்கும் மாடு மீம்ஸ்!
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளான இன்று விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்கும் கால்நடைகளுக்கு மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலையொட்டி கோலங்களில் மாடுகளை செய்துள்ள அலங்கோலங்களை மீம்ஸ் ஆக பகிர்ந்து இருக்கின்றனர் நெட்டிசன்கள்..
பொங்கல் கரும்பு ஆகியவற்றுக்கு அடுத்து பொங்கல் திருவிழாவில் முக்கிய இடம் பெறுபவை கோலங்கள். பொங்கல் பண்டிகையின் போது வீடுகளில் அழகாக கோலங்கள் வரைந்து ஹாப்பி பொங்கல் என எழுதுவது அனைவருக்குமே பிடிக்கும்.
பென்னி குவிக்..தென்மாவட்ட மக்களின் குலசாமி..பொங்கல் வைத்து நன்றிக்கடன் செலுத்திய கிராம மக்கள்
குறிப்பாக பொங்கல் பண்டிகையின் போது இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கலன்று பசு மாடு ஜல்லிக்கட்டு காளை ஆகியவற்றை வீட்டு வாசலில் வரைவது வழக்கம். சில நேரங்களில் டாட்ஸ் லிட்டில் பிரின்சஸ்கள் இது மாடா என மாடுகளுக்கே டவுட் வரும் வகையில் கோலங்களை போடுவது வழக்கம். அப்படி இணையத்தில் கலக்கி வரும் சில மாட்டு கோலங்களை தற்போது பார்க்கலாம்..
1. பசுமாட்டுக்கு எப்படியா திமில் வரும்?
2.இரண்டு தலை உள்ள அபூர்வ பசுமாடு
3.நான் மாடு இல்ல.. பூதம்.. மொரட்டு மாடா இருக்கே
4.யாருய்யா அது ஸ்கேல வச்சு மாடு கோலம் போட்டது
5.எந்த ஆங்கில்ல பாத்தாலும் ஒன்னுமே புரியலயே
6.இது பெருச்சாளி இல்ல.. பசுமாடு ரங்கோலி
7. உண்மையிலேயே இது நம்ம தானா.. பாவம் மாடே கன்ஃப்யூஸ் ஆயிருச்சு