மகிழ்ச்சியைத் தேடிப் பிடி!
சென்னை: மகிழ்ச்சியை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதுவாக வந்து நம்மை மகிழ்விக்காது.. நாம் சார்ந்திருக்கும் விஷயத்தை நாம் எப்படி அணுகுகிறோமோ அதற்கேற்றார் போலத்தான் மகிழ்ச்சியும் நம்மை நாடி வரும்.. ஓடி வரும்.
ஏழுகடலைத் தாண்டி ஏழுமலையைத் தாண்டி ஒரு மனிதன் ஓடுவது அவனுடைய மகிழ்ச்சிக்காகத் தான். எத்தனை சொத்து சுகம் சேர்த்து வைத்தாலும் மகிழ்ச்சி இல்லையென்றால் அது நிறைவான வாழ்க்கையாகாது. நம் மனநிறைவில் தான் மகிழ்ச்சி இருக்கிறது. எந்த செயலையும் முழுமனதோடு செய்தால் நிச்சயம் மகிழ்ச்சி இருக்கும்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். உள்ளம் குளிர்ந்து முகத்தில் ஏற்படும் சந்தோசம் நம்மை மேன்மேலும் உற்சாகப்படுத்தும். நம் மனதுக்குப் பிடித்த செயலைச் செய்யும் போதோ அல்லது மனதுக்குப் பிடித்தவரிடம் பேசும்போதோ நம் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நம்முடைய மகிழ்ச்சிக்கு நாம் தான் காரணம். அதனால் உங்களுக்குப் பிடித்த செயல்களைச் செய்யுங்கள். பிடித்த உடைகளை அணியுங்கள். மனதை எப்போதும் சந்தோசமாக வைத்துக் கொள்ளுங்கள்.
வாழ்வில் வசந்தம் வீச வேண்டுமென்றால் முதலில் நம் மனதைச் செம்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வாழும் வாழ்க்கை ஒரு முறை தான். எனவே வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மனம் திறந்து அனுபவியுங்கள். வாழ்க்கையில் சின்ன சின்ன செயல்களையும் ரசியுங்கள். சந்தோசம் நிறைந்த வீட்டில் சிரிப்பிற்கு பஞ்சம் இருக்காது.
எப்பவும் மகிழ்ச்சியாக இருங்க. உங்க கூட இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வச்சுக்கோங்க. பிறக்கும் போது எதையும் கொண்டு வரவில்லை இறக்கும் போது எதையும் எடுத்துக் கொண்டு போகப்போவதும் இல்லை பிறகென்ன அதற்கு இடைப்பட்ட வாழ்க்கையை ஜாலியாக வாழுங்கள். மகிழ்ச்சி நிறைந்த குடும்பத்தில் நிச்சயம் மகாலஷ்மியின் அனுக்கிரகம் இருக்கும். உங்களுடைய மகிழ்ச்சியைத் தேடிப் பிடிங்க எப்பவும் ஹாப்பியா இருங்க.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications