For Daily Alerts
Just In
தர்மபுரியில் பெண் சிசு கொலை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொல்லஹல்லி புதூர் கிராமத்தில் பிறந்த பெண் குழந்தையை அதன் பெற்றோரும்,அதன் பாட்டியும், தாத்தாவும் சேர்ந்து கொலை செய்தனர்.
இதையடுத்து இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்டபோலீஸ் கண்காணிப்பாளர் மஞ்சுநாத் தெரிவித்தார்.
கடந்த வாரம் இந்த ஊரைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கு மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்தது.அக்குழந்தையை விரும்பாத அதன் பெற்றோர்களும், தாத்தா, பாட்டியும் சேர்ந்து கொலை செய்தனர் என்றுமொல்லஹல்லிபுதூர் கிராம அதிகாரி புகார் கொடுத்தார் என்றார் மஞ்சுநாத்.
Comments
Story first published: Wednesday, May 17, 2000, 5:30 [IST]