அரசு தூதராக காட்டுக்கு செல்ல தயார்: கொளத்தூர் மணி
கோபி:
அரசு தூதுவராக காட்டுக்குள் அனுப்பினால் தான் வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பெரியார் திராவிடர்கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்தமுறை நடந்த வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அப்பாவிபெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில் 59 பெண்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம்பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட சதாசிவம் கமிஷனின் விசாரணை இன்னமும் முடிவடையவில்லை.குற்றச்சாட்டுகளில் சேர்க்கப்பட்டவர்களில் தேவாரமும் ஒருவர்.
அவர் மீண்டும் அதிரடிப்படையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை கமிஷன் முன் சாட்சியம் அளிக்க வேண்டியபொதுமக்கள் வாழும் காட்டுப் பகுதியில் முகாமிட்டு இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்குமா என்பதுசந்தேகத்திற்குரியது. எனவே விசாரணை முடிந்த பின் அவர் தேடுதல் வேட்டையை தொடரட்டும்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது அதிரடிப்படிையின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தமிழக,கர்நாடக அரசுகள் ரூ 5 கோடி வழங்குவதாகவும், இடைக்கால நிவாரணமாக ரூ 1 கோடி வழங்குவதாகவும் ஒப்புக் கொண்டன.ஆனால் இதுவரை எந்த பணமும் கொடுக்கப்படவில்லை.
இந்த தொகையை வழங்க அரசு உடனே ஆவன செய்ய வேண்டும். பெங்களூரிலிருக்கும் வள்ளுவர் சிலையை திறப்பதாககர்நாடக முதல்வர் ஒப்புக் கொண்டார். உடனே வள்ளுவர் சிலை திறக்கப்பட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை இரு அரசுகளும் நிறைவேற்றினால், நான் அரசு தூதராக காட்டுக்குச் சென்று வீரப்பனுடன் பேசதயாராகவுள்ளேன் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications