பதவி ஏற்பு to
சென்னை:
கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவர் அரசு நிலமான டான்சி நிலத்தை வாங்கியது தொடர்பாகவும்கொடைக்கானலில் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் கட்ட அனுமதி கொடுத்ததிலும் ஊழல் செய்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.இதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுகவை மண்ணைக் கவ்வ வைத்தார்ஜெயலலிதா. ஆனால், சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
ஆனாலும் அதிமுக வெற்றி பெற்றது. இதையடுத்து எம்.எல்.ஏவாக இல்லாத ஜெயலலிதாவை அப்போதைய ஆளுனர் பாத்திமாபீவி முதல்வராக நியமித்தார். இதை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசும், அதில் இடம் பெற்றிருந்த திமுகவும் கடுமையாக எதிர்த்தன.
கடந்த மே மாதம் 14ம் தேதி அவசர அவசரமாக ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றார்.
நடந்தது என்ன?
ஏப்ரல் 24, 2001: ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய 4 இடங்களில் ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்புமனுக்கள்தள்ளுபடி செய்யப்படுகின்றன.
2 ஆண்டுகளுக்கு மேல் சிறைதண்டனைபெற்றவர்கள் தேர்தலில் போட்டிய முடியாது என்ற மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8(3) ஐ மேற்கோள்காட்டி,இந்த 4 மனுக்களையும் தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர்.
மே 10, 2001: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமோக வெற்றிபெற்றது.
மே 14, 2001: தமிழக கவர்னர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவுக்கு தமிழக முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜூன் 29, 2001: கருணாநிதியும் மாறனும் அவர்களது வீட்டில் போலீசாரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
ஜூலை 1, 2001: கருணாநிதி தாக்கப்பட்ட விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவான அறிக்கை கொடுத்ததாகக் கூறி பாத்திமா பீவியை ராஜினாமாசெய்ய வைத்தது மத்திய அரசு. தொடர்ந்து சில நாட்களில் ஆந்திர ஆளுநர் ரங்கராஜன் கூடுதல் பொறுப்ாக தமிழக ஆளுநராகவும் பொறுப்பேற்றார்.
செப்டம்பர் 4, 2001: தன் மீதான டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளின் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை விரைவாக நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த ஜெயலலிதாவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
செப்டம்பர் 6, 2001: ஜெயலலிதா தான் முதல்வராக வருவார் என்ற தெரிந்துதான் மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து, பெரிய வெற்றியைக்கொடுத்தனர். மக்களின் தீர்ப்பைவிட, சட்டம் பெரியதா?. மக்களுக்காகத்தானே சட்டம் இயற்றப்பட்டுள்ளது? என்று ஜெயலலிதாவின் வக்கீல்சுப்ரீம் கோர்ட்டில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு நீதிபதிகள் மக்களின் ஆதரவை பெற்றுவிட்டால் எண்ணவேண்டுமானாலும் செய்யலாமா. பிறகு சட்டம் எதற்கு என்று பதில் கேள்விகேட்டனர்.
செப்டம்பர் 7, 2001: சென்னை உயர் நீதிமன்றத்தில் டான்சி வழக்கு அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு தான்மீண்டும் ஆரம்பிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
செப்டம்பர் 20, 2001: டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளை விசாரிக்க, நீதிபதி தினகரை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றத் தலைமைநீதிபதி சுபாஷன்ரெட்டி உத்தரவிட்டார்.
செப்டம்பர் 21, 2001: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. பரபரப்பான இந்தத் தீர்ப்பால்ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
-
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications