சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது - கருணாநிதி
சென்னை:
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ள விஷயத்தில், சட்டம் தன்கடமையைச் சரியாகச் செய்துள்ளது என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார்.
3 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்கள் முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்றுஅறிவிக்கவேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரூச்சா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தனது தீர்ப்பில்ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று கூறியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதாவது:
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்ற தீர்ப்பின் மூலம் சட்டம் தன் கடமையைச் சரியாகச்செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பினால் எனக்கு மகிழ்ச்சியும் இல்லை, வருத்தமும் இல்லை.
மேலும் சட்டத்தை மதிப்பவர்கள் யாராக இருந்தாலும், இந்தித் தீர்ப்பின் மூலம் திருப்தி அடையாமல்இருக்கமுடியாது. நானும் சட்டத்தை மதிப்பவன் என்ற முறையில், இந்தத் தீர்ப்பினால் திருப்தி அடைகிறேன்.
உண்மையை கொஞ்சகாலம் தான் மறைக்க முடியும், நீண்டகாலத்திற்கு மறைக்க முடியாது என்பது இந்தத் தீர்ப்பின்மூலம் விளங்குகிறது.
தமிழக மக்கள் இந்தச் செய்தியை அறியும்போது அவர்கள் அதை எடுத்துக்கொள்ளும் மனோபாவத்தைப்பொறுத்து, ஜெயலலிதாவின் மீது மக்களின் அனுதாபம் அமையும்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
நல்ல தீர்ப்பு - வைகோ
சுப்ரீம் கோர்ட் வெளியிட்டுள்ள இந்தத் தீர்ப்பின் மூலம் ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைவலிவும், பொலிவும் பெறும். இது ஒரு முக்கியமான நல்ல தீர்ப்பு என்று வைகோ கூறினார்.
ஜெ.க்கு சிறந்த பாடம் - ராமதாஸ்
சுப்ரீம் கோர்டடின் இந்தத்தீர்ப்பு ஜெயலலிதாவின் எதிர்கால அரசியலுக்கு ஒரு சிறந்த பாடமாக அமையும். தமிழகமக்கள் தவறு செய்தவர்களை இனியும் அனுமதிக்கமாட்டார்கள் என்றார் ராமதாஸ்.
ஜெ.வைப் பாராட்டுகிறார் (?) இல.கணேசன்
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றுக்கொள்வது செல்லாது என்று பாரதீய ஜனதாக் கட்சி ஆரம்பத்திலேயேகூறியிருந்தது. தற்போது அது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மூலம் நிரூபணமாகியுள்ளது.
சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி ஆட்சிப்பொறுப்பில் நீடிக்கவேண்டும் என்று இனி யாரும்எண்ணமாட்டார்கள்.
இவ்வாறு யாரும் எண்ணக் கூடாது என்பதற்கு சிறந்த முன் உதாரணமாகத்திகழும் ஜெயலலிதாவை அந்த வகையில்நான் பாராட்டவேண்டும் என்று எல்.கணேசன் கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications