எம்.எல்.ஏக்கள் கூடினர்: இன்று இரவே புதிய முதல்வர் பதவியேற்பு
சென்னை:
தமிழகத்தின் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில்குவிந்துள்ளனர்.
அங்கு முதல்வர் பதவியேற்பார். உடன் சில புதிய அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்ற தெரிகிறது.
ஜெயலலிதாவின் நியமனம் செல்லாது என்பதால் அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் நியமனமும் செல்லாது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறிவிட்டது. இதனால் அமைச்சர்களும் இன்று இரவே ராஜினாமா செய்வார்கள் என்று தெரிகிறது.
இந்த புதிய முதல்வர் ஏற்பாடு இடைக்கால ஏற்பாடு தான் என ஜெயலலிதா கூறியுள்ளார். விரைவில் நான் குற்றமற்றவள் என்பதைநிரூபித்து மீண்டும் முதல்வராவேன். இதனால் தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும்ஜெயலலிதா கூறியுள்ளார்.
மேலும் வன்முறையில் இறங்கி தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும்ஜெயலலிதா கூறியுள்ளார்.
முன்னதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்தார்.