இன்றே புதிய முதல்வர் பதவியேற்பு? - ஆளுநர் அவசர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, சட்டஆலோசகர்களுடன் தமிழக ஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்றைக்குள்ளாகவே புதிய முதல்வரை நியமித்துவிட வேண்டும் என்று ஆளுநர்முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக அவர் சட்ட ஆலோசர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, முதல்வர்அலுவலகத்தில் இருந்தும் ராஜ் பவனுக்குத் தகவல்கள் பறந்துள்ளன என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் நெடுஞ்செழியனின் மனைவியான விசாலாட்சியே அடுத்தமுதல்வர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications