மீண்டும் நில நடுக்கம் ஏற்படலாம்: நிபுணர் தகவல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம்காரணாக சென்னை நகர மக்கள் நடுநடுங்கி போய் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் மீண்டும் நில நடுக்கம் வரக்கூடும் என்று சென்னை வானிலைஆராய்சி மைய துணை இயக்குனர் ஜெனரல் ஏ.கே. பட்நாகர் கூறியுள்ளார்.
நிலநடுக்கம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று சென்னை வானிலை ஆராய்ச்சிநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதே நேரத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாகமீண்டும் சிறு சிறு நில நடுக்கங்கள் ஏற்படக்கூடும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சிநிலைய துணை இயக்குனர் ஜெனரல் ஏ.கே.பட்நாகர் கூறியுள்ளார்.
ஆனால், மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றார்.












Click it and Unblock the Notifications