22 போலீசார் சஸ்பெண்ட் - 56 போலீசார் டிரான்ஸ்பர்
சென்னை:
சென்னை செங்குன்றம் அருகேயுள்ள கோட்டூர், அத்திப்பாக்கம் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கள்ளச்சாராயம்குடித்ததில் 32 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து அரசு எடுத்த நடவடிக்கையில் 22 போலீசார் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெணட்) செய்யப்பட்டுள்னர். 56 போலீசார் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை செங்குன்றம் அருகேயுள்ள கோட்டூர் என்ற இடத்தில் கள்ளச்சாராயவிற்பனை ஜரூராக நடந்து கொண்டிருந்தது.
கோட்டூர், அத்திப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகள் ஏராளமானவர்கள்சாரயத்தை வாங்கி குடித்தனர். இவர்களில் பல பெண்களும் அடங்குவர்.
சாராயத்தை குடித்த சில நிமிடங்களிலேயே பலரும் வாந்தி எடுத்து மயங்கிவிழுந்தனர்.
பலர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இவர்கள் அனைவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும்,சென்னை அரசு பொது மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 11 பேர் இறந்து போனார்கள். மேலும் 21 பேர் சிகிச்சை பலனின்றிஇறந்து போனார்கள். இன்னமும் பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
சாராயத்தை குடித்த பலரும் கண்பார்வை இழந்து துடித்து வருகிறார்கள். குடும்பத்த தலைவனை இழந்து வருந்தும்பெண்கள்,.தந்தையை இழந்த சிறு குழந்தைகள் என பலரும் கதறி அழும் காட்சி கல் நெஞ்சம் கொண்டவரையும்கரைக்கும் விதமாக உள்ளது.
இந்நிலையில் அரசு எடுத்த நடவடிக்கையில் 22 போலீசார் சஸ்பெண்ட் செய்ப்பட்டுள்ளனர். 56 போலீசார்டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை ) சம்பவ இடத்தை பார்வையிட்ட பின் தமிழக டி.ஜி.பி. நெய்ல்வால்செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விஷ சாரய சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டேன். சாராயம் விற்பனை செய்த கஸ்தூரி, அவரது மகன்பார்த்திபன் இருவரையும் கைது செய்து விசாரணை செய்துவருகிறோம். அவர்கள் இருவர் மீதும் கொலை முயற்சிவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ததன் மூலமும், சாராயம் குடித்தவர்களின் ரத்தத்தைபரிசோதனை செய்ததன் மூலமும் சாராயத்தில் மெத்தனால் என்ற விஷத்தன்மை கொண்ட திரவம் கலந்துள்ளதுதெரியவந்துள்ளது.
இந்த சாராய சாவு சம்பவம் தொடர்பாக செங்குன்றம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 42 பேரும், மாதவரம்மதுவிலக்கு அமலாகக்கப்பிரிவு போலீசார் 14 பேரும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். 22 போலீசார் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர்.
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்- இன்ஸ்பெக்டர்கள் திரவியம்,அற்ஜுனன், குமரன், சுப்ரமணிய ராஜு, ஒரு ஏட்டு, 6 கான்ஸ்டபிள்கள் மற்றும் செங்குன்றம் காவல் நிலையத்தைச்சேர்ந்த ஏட்டுகள் 8பேரும், 1 கான்ஸ்டபிள் உள்ளிட்ட 22 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றார் டி.ஜி.பி.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications