என்ன, விஷம் சாப்டாச்சா?
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க கோட்டைக்கு வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த நபர் ஜெயலலிதாவைப் பார்க்கமுடியாததால் விஷம் குடித்தார். கவலைக்கிடமான நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதல்வரின் அலுவலகம், தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை வளாகத்தில் உள்ளது. அங்கு முதல்வரிடம் மனுகொடுப்பதற்காக ஏராளமானோர் வருகின்றனர். அவர்கள் அனைவரும் முதல்வரைப் பார்க்க முடிவதில்லை.
சமீபத்தில் கோவையைச் சேர்ந்த ஒரு தம்பதி இதுபோல முதல்வரைப் பார்க்க வந்தது. ஆனால் அவர்களால் பார்க்க முடியவில்லை.இதையடுத்து கையோடு எடுத்து வந்திருந்த விஷத்தை அந்த தம்பதி குடித்து விட்டது.
கோட்டை வளாகத்திலேயே சில மணி நேரம் அந்த தம்பதியினர் உயிருக்குப் போராடினர். அதன் பின்னர் அவர்கள் இருவரும்மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். ஆனால் இருவரும் இறந்து விட்டனர்.
அந்த தம்பதியினரின் சாவுக்கு அனுதாபம் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா அவர்களது மகளுக்கு அரசு வேலையும், இழப்பீடும்கொடுத்து உதவினார்.
கோவை தம்பதியின் சாவும், அவர்களுக்கு அரசு செய்த உதவியும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.கோட்டைக்கு வரும் பலரும், முதல்வரைப் பார்க்க தங்களை அனுமதிக்காவிட்டால் விஷம் குடித்து விடுவதாக காவலர்களைமிரட்டும் அளவுக்குப் போய்விட்டது நிலைமை.
சமீபத்தில் கூட ஒருவர் தான் விஷம் குடிக்கப் போவதாக மிரட்டினார். உடனடியாக போலீஸார் தலையிட்டு அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந் நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் நேற்று விஷம் குடித்துவிட்டார். முதல்வர் ஜெயலலிதாவிடம்மனு கொடுப்பதற்காக வந்த இவரால் முதல்வரைப் பார்க்க முடியவில்லை.
இதையடுத்து விஷம் குடித்துத் தற்கொலை செய்யப் போவதாக அவர் புலம்பிக் கொண்டே சென்றுள்ளார். பின்னர் தான் கையோடுகொண்டு வந்திருந்த விஷத்தை எடுத்துக் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
கோவை தம்பதியினரின் சம்பவத்தில் போலீஸாரின் அக்கறையின்மைதான் அவர்கள் உயிழக்கக் காரணம் என்று கூறப்பட்டது.எனவே, நேற்று போலீசார் மிக வேகமாக செயல்பட்டு அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்வரைப் பார்க்க வருபவர்கள் இப்படி விஷம் குடிக்க ஆரம்பித்திருப்பது கோட்டை போலீசாருக்கு பெரும் கவலையளிக்கஆரம்பித்துள்ளது.
கோட்டை வளாகத்தில் ஒரு கையில் மஞ்சள் பை, இன்னொரு கையில் கோரிக்கை மனுவோடு திரியும் மக்களில்யாராவது ஒருவர் கொஞ்சம் ஒரு மாதிரியாக இருந்தாலே, என்ன விஷம் சாப்டாச்சா என்று கேட்கும் நிலைமைக்குவந்துவிட்டுவிட்டனர் போலீசார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications