கன மழைக்கு இதுவரை 18 பேர் பலி: முதல்வர் நிதியுதவி
சென்னை:
தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாகப் பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 18 பேர் வரைபலியாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்து பலியான 4 பேரின் குடும்பத்தினருக்குமுதல்வர் ஜெயலலிதா நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதிலும் வட கிழக்கு பருவ மழை தீவிரமாகியுள்ளது. சென்னையைத் தவிர பிற இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் லேசான மழை பெய்து வருகிறது. கன மழைக்கு இதுவரை தமிழகம் முழுவதிலும் 18 பேர்இறந்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் கருமரம்பாளையம் என்ற இடத்தில் பெய்த கன மழையில் குடிசை வீடு சரிந்துவிழுந்ததில் 4 பேர் பலியாயினர். மேலும் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.
முதல்வர் இரங்கல், நிதியுதவி:
மழைக்குப் பலியான நான்கு பேரின் குடும்பத்திற்கும் முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துள்ளார்.
அவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.15,000, லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.6,000 வழங்கவும் தல்வர்உத்தரவிட்டுள்ளார்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு:
இதற்கிடையே, தமிழகம் முழுவதிலும் பெய்து வரும் கன மழையினால் மாநிலம் முழுவதும் பல இடங்களில் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு காணப்படுகிறது. தேனி, தர்மபுரி, கோயம்புத்தூர்,திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்துவருகிறது.
ஒசூரில் பெய்த கன மழையினால் அங்குள்ள தொழிற்பேட்டையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டநிறுவனங்களுக்குள் மழை நீர் புகுந்து விட்டது.
சரியான கால்வாய் வசதி இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில் நிறுவன உரிமையாளர்கள் புகார்கூறியுள்ளனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications