சாலை விபத்தில் இறந்த எஸ்.ஐ. குடும்பத்துக்கு ஜெ. நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாலை விபத்தில் மரணமடைந்த தர்மபுரியைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம்நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் மதிக்கோன் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் கிருஷ்ணன்.
இவர் சமீபத்தில் குண்டலப்பட்டி என்ற இடத்தில் லாரி மோதி பலியானார்.
இதுகுறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஜெயலலிதா, கிருஷ்ணனின் குடும்பத்துக்கு ரூ.1லட்சம் நிவாரணஉதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications