டெங்கு காய்ச்சல் அபாயம்: கோவையில் 50 பன்றிகள் விஷ ஊசி போட்டுக் கொலை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் நகரில் பன்றிகளை தேடிப் பிடித்து சுட்டுக் கொல்லும் பணியில் மாநகராட்சி நிர்வாகம்ஈடுபட்டுள்ளது.
பன்றிகளால் விஷக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவுவதால் அவற்றை வளர்க்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கோயம்புத்தூர் மாநகராட்சி ஊழியர்கள் பன்றிகளைத் தேடிப் பிடித்து கொல்லும் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மட்டும் 50க்கும் மேற்பட்ட பன்றிகள் பிடிக்கப்பட்டு, விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டன. தொடர்ந்துபன்றி வேட்டை நடக்கும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
பன்றிகளை வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி எச்சரிக்கைவிடுத்துள்ளது.
சமீபத்தில் தான் டெங்கு காய்ச்சல் அபாயம் காரணமாக சேலம் மாநகரில் சுற்றித் திரியும் பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-->












Click it and Unblock the Notifications