வெள்ளை அறிக்கை கோருகிறார் இளங்கோவன்
சென்னை:
அடிக்கடி அமைச்சர்கள் மாற்றப்படுவது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என காங்கிரஸ்கட்சி கோரியுள்ளது.
தமிழக காங்கிரஸ் செயல் தலைவரான இளங்கோவன் நிருபர்களிடம் பேசுகையில்,
ஏதோ ஒரு முறை இரண்டு முறை அமைச்சர்கள் மாற்றப்பட்டால் அது இயற்கையானது. ஆனால், ஆட்சிக்கு வந்த சுமார் 20மாதங்களில் 23 அமைச்சர்களை மாற்றியுள்ளார் ஜெயலலிதா. இதன் பின்னணி என்ன?, இவர்கள் செய்த மோசடிகள் என்னஎன்பது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டிய கட்டாயம் ஜெயலலிதாவுக்கு உண்டு.
அடிக்கடி அமைச்சரவையை மாற்றுவது என்பது ஜனநாயகத்துக்கும் விதிமுறைகளுக்கும் முரணானது.
அதே நேரத்தில் மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக நீக்கப்பட்ட பலர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பிடித்தும் வருகின்றனர்.இது ஏன்?. இவர்கள் ஏன் நீக்கப்பட்டார்கள், ஏன் சேர்க்கப்பட்டார்கள்?
அதிமுக ஆட்சி காலியாவதற்குள் தனது கட்சியின் எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் ஒருமுறையாவது அமைச்சர் பதவியைத் தந்துஅவர்களை சம்பாதிக்க வைத்து குபேரர்களாக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதன் மூலம் மக்கள் பணத்தை கொள்ளைஅடித்து இவர்களைக் கோடீஸ்வரர்கள் ஆக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்தியது மாதிரி மக்கள் அனைவரும் இணைந்துஜெயலலிதாவே வெளியேறு போராட்டம் நடத்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் போடவும் யோசித்துவருகிறோம்.
காங்கிரஸ் கட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளின் கூட்டம் நாளை நடக்கும். அதில் ஜெயலலிதா அரசின்செயல்பாடுகள், தவறான கொள்ளைகள் குறித்தும் அதை எதிர்ப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்றார் இளங்கோவன்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications