போக்குவரத்து ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றால் ரூ. 3.50 லட்சம்!
சென்னை:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறையின் நிதிக் கழக ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுக்கான கருணைத் தொகைஅறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக ரூ. 3.50 லட்சம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கழகத்தில் 10 வருடம் பணி முடித்தவர்கள் அல்லது 40 வயதை எட்டியவர்கள், விருப்ப ஓய்வுக்குவிண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் ஆவர்.
ஏப்ரல் 16ம் தேதி வரை இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். முதலில் வருபவர்களுக்கு முதலில் என்றவகையில் விருப்ப ஓய்வு வழங்கப்படும்.
விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, பணியை முடித்த ஆண்டுகளுக்கு, வருடத்திற்கு 30 நாள் சம்பளம்,ஈட்டுப்படி உள்ளிட்டவையும் மீதமுள்ள பணிக்காலத்திற்கு, வருடத்திற்கு 10 நாள் சம்பளம், ஈட்டுப்படிஆகியவையும் கணக்கிட்டுத் தரப்படும்.
அதன்படி இந்த ஊழியர்களுக்கு அதிகபட்சம் ரூ. 3.50 லட்சம், குறைந்தபட்சம் ரூ. 1.75 லட்சம் கிடைக்கும்.
விருப்ப ஓய்வின்போது வழங்கப்படும் கருணைத் தொகை தவிர, வழக்கமான பிற பலன்களும் ஊழியர்களுக்குக்கிடைக்கும்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறையின் நிதி கழகத்திற்குசென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகியஇடங்களில் கிளைகள் உள்ளன.
இந்த நிறுவனம் மூலம் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 31,766 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்தக் கழகத்தில் ஆட்களைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 22 பணியிடங்கள் கொண்டு வரப்பட்டுள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல துறைகளுக்கும், பல பணிகளுக்கும் விருப்ப ஓய்வுத் திட்டம் நீட்டிக்கப்படஉள்ளது.
விருப்ப ஓய்வு என்ற பெயரில் அரசே மறைமுக பல நெருக்குதல்கள் தந்து கட்டாய ஓய்வு கொடுத்து வருவதாகஅரசு ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications