மனித குளோனிங்: கலாம் கடும் எதிர்ப்பு
மும்பை:
குளோனிங் முறை மூலம் மனிதனை உருவாக்கும் முறைக்கு ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குளோனிங் மூலம் மனிதனை உருவாக்குவது குறித்த அறிவியல்ஆராய்ச்சிகள் வெளியாகி மக்களை ஆச்சரியப்படுத்தின.
ஆனால் மனித குளோனிங்கால் பெரும் குழப்பம் ஏற்பட்டு விடும் என்று கூறி பலரும் அதைக்கடுமையாக எதிர்த்தனர்.
இதற்கிடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகின் முதல் குளோனிங் குழந்தை பிறந்து விட்டதாக,இது தொடர்பாக ஆராய்ச்சி செய்து வரும் ஒரு நிறுவனம் தெரிவித்தது.
விரைவில் அடுத்தடுத்து குளோனிங் குழந்தைகள் பிறக்கப் போவதாகவும் அந்நிறுவனம்கூறியுள்ளது.
இந்நிலையில் குளோனிங் மூலம் மனிதனை உருவாக்கும் முறையை டாக்டர் கலாம் கடுமையாகஎதிர்த்துள்ளார். மும்பையில் நடந்த ஒரு விழாவின்போது அவர் வழக்கம்போல் மாணவ,மாணவிகளைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பேசுகையில்,
மனித குளோனிங் குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இது ஒரு தவறான முறையாகும்.குளோனிங் மூலம் மனிதனை உருவாக்கக் கூடாது.
வரும் 2029ம் ஆண்டுக்குள் மனித மூளையை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்உருவாக்கப்படும். ஆனால் மனித மூளையை உங்களில் யாராவது உருவாக்க முடியுமா?
உலகின் பல இடங்களில் நடக்கும் போருக்கு வறுமைதான் காரணம். வறுமையை முற்றிலும் ஒழித்துவிட்டால் அதற்குப் பின் போர் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. மதம் மற்றும் பொருளாதாரப்பிரச்சனைகளும் போர் வரக் காரணமாக உள்ளன என்றார் டாக்டர் கலாம்.
விஞ்ஞானியாக இருந்து, பின்னர் நாட்டின் முதல் குடிமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு உங்கள்மனநிலை எப்படி இருந்தது என்று ஒரு மாணவி கேட்டபோது, "நான் எப்போதுமே ஒருவிஞ்ஞானிதான். இப்போது ஜனாதிபதி ஆகியுள்ளேன். அவ்வளவுதான்.
தலைசிறந்த ஒரு விஞ்ஞானி ஆவதற்கு சுமார் 40 ஆண்டு காலம் வியர்வை சிந்தியுள்ளேன். ஆனால்திடீரென்று ஜனாதிபதி ஆகிவிட்டேன்.
ஆனாலும் ஒரு ஜனாதிபதியாக இந்தியாவைப் பாதுகாப்புடன் எதிர்காலச் சந்ததியினரிடம்ஒப்படைப்பதுதான் என்னுடைய முக்கியக் குறிக்கோள்" என்று பதிலளித்தார் டாக்டர் கலாம்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications