அலட்சியம் காட்டிய போலீஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
ஒசூர்:
நடிகை விந்தியாவைக் கற்பழிக்க முயன்ற பைனான்சியரைக் கைது செய்யாமல், அவரைக் காப்பாற்ற முயன்ற போலீஸ்இன்ஸ்பெக்டரும், சப்-இன்ஸ்பெக்டரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒசூரில் லாட்ஜில் தங்கியிருந்தபோது நள்ளிரவில் தனது அறைக்குள் சிலர் புகுந்து தன்னைக் கற்பழிக்க முயற்சித்தது குறித்துபோலீசாருக்கு விந்தியா தகவல் கொடுத்தார். ஆனால், ஒசூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரும் சப்-இன்ஸ்பெக்டரும் மிகஅசால்டாக நடந்து கொண்டனர்.
புகாரை வாங்க மறுத்ததோடு, லாட்ஜுக்கும் வர மறுத்தனர். இதையடுத்து விஜய்காந்தைத் தொடர்பு கொண்டு விந்தியா புகார் கூறஅவர் டிஜிபி மற்றும் கிருஷ்ணகிரி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் பேசினர்.
இதையடுத்துத் தான் ஒசூர் போலீசார் வழக்கையே பதிவு செய்தனர். ஆனாலும் விசாரணைக்கு வந்த இடத்தில் மிக அலட்சியமாகநடந்து கொண்டனர். கற்பழிக்க முயன்ற கமல்ராஜ் என்று உறுதியான பிறகும் அவனை விட்டுவிட்டு உடன் வந்த இருகைத்தடிகளை மட்டும் கைது செய்தனர்.
ஒசூரின் பெரிய ரெளடிகளில் ஒருவனான கமல்ராஜ், வட்டித் தொழில் செய்து வருகிறான். அத்தோடு சினிமாத்துறையிலும்பணத்தை முதலீடு செய்துள்ளான். அவனிடமிருந்து ஒசூர் போலீசாருக்கு வழக்கமான மாமூலும் போய்விடும் என்பதால் அவனதுரெளடித்தனத்தை போலீசார் கண்டுகொள்வதும் இல்லை.
விந்தியா விஷயத்திலும் போலீசார் அலட்சியம் காட்டியதற்கு கமல்ராஜிடம் அவர்கள் வாங்கிய மாமூலே காரணம் என்றுதெரிகிறது.
கற்பழிக்க முயன்ற கமல்ராஜை தப்ப வைக்க போலீசார் முயல்வதாக செய்தி வெளியானதையடுத்து ஒசூர் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரும் சப் இன்ஸ்பெக்டர் துரைசாமியும் நேற்று இரவோடு இரவாக கிருஷ்ணகிரி ஆயுதப் படைப் பிரிவுக்குஅதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே போலீசாரிடம் கமல்ராஜ் தந்துள்ள வாக்குமூலத்தில், நான் சிவராம் என்ற படத்துக்கு ரூ. 2 லட்சம் பைனான்ஸ்செய்தேன். அதில் என்னை ஹீரோவாகப் போடுவதாக சொல்லி ஏமாற்றிவிட்டார்கள். இந் நிலையில் அந்தப் படத்தின்படப்பிடிப்புக் குழு ஒசூர் வந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை சந்தித்து பணத்தைத் திருப்பி வாங்கவந்தேன்.
விந்தியா தங்கியிருந்த அறையில் சிவராம் படக் குழு தான் தங்கியிருப்பதாக நினைத்து நுழைந்துவிட்டேன். அங்கு விந்தியாஇருப்பது எனக்குத் தெரியவே தெரியாது என்று கூறியுள்ளான்.
இந்த வாக்குமூலமே கூட இன்ஸ்பெக்டரும், சப் இன்ஸ்பெக்டரும் சேர்ந்து ஜோடித்ததாகவே தெரிகிறது. கமல்ராஜை தப்பவைப்பதற்காக இவ்வாறு வாக்குமூலத்தை அவர்கள் பதிவு செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
தனக்கு விந்தியாவின் அறைக் கதவின் கள்ளச்சாவி எப்படி கிடைத்தது என்று அவன் வாக்குமூலத்தில் விளக்கம் ஏதும்சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு











Click it and Unblock the Notifications