ஜீவஜோதி வழக்கு: ராஜகோபாலிடம் பணம் வாங்கவில்லை- தடயவியல் நிபுணர் மறுப்பு
சென்னை:
சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆதரவாக ரூ. 10 லட்சம் பணம் வாங்கியதாகக் கூறப்பட்டதைதிட்டவட்டமாக மறுத்துள்ளார் பிரபல தடயவியல் நிபுணர் டாக்டர் சந்திரசேகர்.
சென்னைப் பல்கலைக்கழக தடயவியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் டாக்டர் சந்திரசேகர்.இந்தியாவிலேயே பிரபலமான தடயவியல் நிபுணர். ராஜீவ் காந்தி கொலை வழக்கு, ஆட்டோ சங்கர் வழக்குஉள்ளிட்டவற்றில் மிகவும் துல்லியமாக தடயங்களை புலனறிந்து புகழ் பெற்றவர்.
இந் நிலையில், சரவண பவன் அதிபர் ராஜகோபால் மீதான கொலை வழக்கில் அவருக்கு சாதகமாக சந்திரசேகர்சாட்சியம் அளித்திருந்தார். அவரிடம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வீரராகவன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
அப்போது ராஜகோபாலுக்கு ஆதரவாக சாட்சி சொல்வதற்கு ரூ. 10 லட்சம் வாங்கினீர்கள் என்று வழக்கறிஞர்வீரராகவன் குற்றம் சாட்டினார். அதை சந்திரசேகர் திட்டவட்டமாக மறுத்தார். இது போன்ற குற்றச்சாட்டுக்கள என்மீது அவதூறை ஏற்படுத்தும் நோக்கத்தில் கூறப்படுவதாக அவர் கடுமையாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் எத்தனை மண்டை ஓடுகளைப் பாதுகாத்துவைத்துள்ளார்கள் என்பது குறித்து எனக்குத் தெரியாது. இருப்பினும், 2003ம் ஆண்டு வரை 1,198 மண்டைஓடுகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளன. எனது சொந்த விருப்பத்தின் பேரில் 600 மண்டை ஓடுகளை நான்பரிசோதித்துள்ளேன்.
ஆட்டோ சங்கர் வழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட 3 மண்டை ஓடுகளை நான் பரிசோதித்துப் பார்த்து அறிக்கைகொடுத்தேன். ஆனால் அந்த அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. இதேபோன்றஆய்வுதான் பிரேமானந்தா வழக்கிலும் மேற்கொள்ளப்பட்டது.
எனவே தற்போது ராஜகோபால் வழக்கிலும் டாக்டர் ஜெயப்பிரகாஷ் மேற்கொண்டுள்ள தடயவியல் அறிக்கையைஏற்க முடியாது என்றார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications