சேலம்: இவர்கள் ரசிகர்களா இல்லையா?
சேலம்:
நாாடாளுமன்றத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக--பா.ஜ.க. கூட்டணியை ஆதரிப்பதாகரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா அறிவித்ததற்கு சேலத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.
மேலும், ரசிகர் மன்றத்தில் இருந்து விலகி உறுப்பினர் அட்டைகளையும் தீ வைத்து எரித்தனர்.
சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் எக்ஸ்டென்ஸன்களில் உள்ள பாட்ஷா ரஜினி ரசிகர் மன்ற தலைவர்வெங்கடேஷ், பொருளாளர் மணி, செயலா ளர் ரஜினி ரவி ஆகியோர் தங்கள் பொறுப்புகளில் இருந்தும், மன்றஉறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்தனர்.
அவர்கள் 50-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள கோட்டைமைதானம் வந்தனர். இவர்களுடன் மகுடஞ்சாவடியில் இருந்து வந்த ரஜினி ரசிகர்களும் கலந்துகொண்டனர்.
அங்கு ரஜினி மன்ற உறுப்பினர் அட்டை களை கிழித்து தீ வைத்து எரித்தனர். ரஜினி படமும் எரிக்கப்பட்டது. ரஜினிமன்ற போர்டையும் கொண்டு வந்து அதில் இருந்த ரஜினிகாந்த் படத்தை பெயிண்ட்டால் அழித்தனர்.
பின்னர் வெங்கடேஷ் கூறியதாவது:
1996-ல் நடந்த தேர்தலில் அதிமுகவை எதிர்த்து குரல் கொடுத்த ரஜினி தற்போது திடீரென்று அதிமுகக்கு ஆதரவுதெரிவித்து இருப்பது எங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் சத்தியநாராயணா தான். இவர் ரசிகர்களின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளாமல்அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் உறுப்பினர் அட்டை களைஎரித்துவிட்டோம்.
மணி, ரஜினிரவி ஆகியோர் கூறுகையில் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கொடுத்தது தமிழ்நாடு. ஆனால் அவர்காவிரி பிரச்சினைக்காக திரையுலகினருடன் சேர்ந்து போராடாமல் தனிப்பட்ட முறையில் உண்ணா விரதம் இருந்துபிளவு ஏற்படுத்தினார்.
அதேபோல் இப்போதும் தனது முடிவை திடீரென்று மாற்றிக்கொண்டு அதிமுக கூட்டணிக்கு ஆதரவுதெரிவித்துள்ளார். இவர் எது சொன்னாலும் கேட்க நாங்கள் முட்டாள்கள் அல்ல என்றனர்.
இந் நிலையில் சேலம்- நாமக்கல் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சக்திவேல் இந்தச் சம்பவம்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இது ரஜினி ரசிகர்கள் போல் பாமகவினர் செய்த வேலையாகும். சேலம் தம்மண்ண செட்டித் தெருவில் உள்ளபழைய பொருள் விற்கும் கடையில் ஒரு பழைய போர்டை வாங்கி, அதை ரஜினி ரசிகர் மன்ற போர்டு போல் மாற்றிஇந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
அவர்கள் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளோம். தக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் விபரீதநடவடிக்கைகள் ஏற்படும் என்றார். பின்னர் ரஜினி ரசிகர்கள் பேரில் போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்யவேண்டும் என்று சொல்லி சேலம் மேம்பாலத்தில் சிலர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த இரு சம்பவங்களால் சேலத்தில் பெரும் பரபரப்புஏற்பட்டது.
இச் சம்பவம் நடந்தபோது சத்தியநாராயணா சேலத்தில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!











Click it and Unblock the Notifications