4,000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தைத் தாக்கிய சுனாமி!
சென்னை:
![]() |
தமிழகத்தில் கடந்த 26ம் தேதி தாக்கிய சுனாமி பேரலைகளால் பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர்.தமிழகத்தில் இதுவரை சுனாமி தாக்கியதே இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் 4,000 ஆண்டுகளுக்கு முன்பேதமிழகத்தை சுனாமி தாக்கியுள்ளது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
தமிழில் கடல்கோள் என்று அழைக்கப்படுகின்றது சுனாமி.
தமிழகம் என்று நாம் இப்போது சொல்லும் நிலப்பரப்பை விட பல மடங்கு பெரிய நிலப்பரப்பு தமிழகத்தின் தென்கோடியில் இருந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இன்றைய இலங்கை, மாலத்தீவு,தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அனைத்தும் ஒன்றாக இருந்தன.
இந்த நிலப்பரப்புக்கு லெமூரியா கண்டம் என்று பெயர்.
நம்தமிழ் இலக்கியங்கள் லெமூரியா கண்டத்தை குமரிக் கண்டம் என்று அழைத்தன.
வட இந்தியாவில் உள்ள இமயமலை போல தென்கோடி குமரிக் கண்டத்திலும் மிக உயர்ந்த மலை இருந்துள்ளது.இந்த மலைக்கு குமரிக் கோடு என்று பெயர். கோடு என்றால் மலை என்று பெயர்.
இதேபோல, இந்த மலையிலிருந்து உற்பத்தியான குமரியாறு, பரளியாறு ஆகியவை கங்கை, யமுனை போலவற்றாத ஜீவநதிகளாக ஓடி வளம் கொழித்தன.
இந்த குமரிக் கண்டத்தில்தான் மதுரை நகரம் (இப்போதைய மதுரை அல்ல) இருந்தது. இங்குதான் முதல் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.
![]() |
தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்கள் பிரிந்தன (குமரிக் கண்டத்துடனான இவற்றின் தொடர்பு கடலில்மூழ்கியது). உயரமான பகுதிகளான இலங்கை, மாலத்தீவு ஆகியவை தீவுகளாக கடலுக்கு வெளியே எட்டிப்பார்த்தபடி நின்றன.
இந்த பேரழிவுக்குப் பின்னர் தான் பாண்டிய மன்னர்கள் தங்களது தலைநகரை கபாடபுரத்திற்கு மாற்றினர்.
இந்தப் பகுதியிலும் சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சுனாமி தாக்கியது. இதில் மிச்சமிருந்த நிலப் பரப்பும்அழிந்தது. அதன் பிறகே பாண்டியர்கள் கடல் பகுதியில் இருந்து பல நூறு கிமீ உள்வாங்கிய பகுதியானதற்போதைய மதுரைக்கு இடம் பெயர்ந்தனர்.
பூம்புகாரில் கடல் கோள் ஏற்பட்டது குறித்து இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் மிக விரிவாகவேவிளக்கப்பட்டுள்ளது.
மேலும் continental drifts எனப்படும் கண்டத் திட்டுக்களின் தோற்றம் குறித்த ஆய்வாளர்களும் தமிழகம்உள்ளிட்ட இந்தியப் பகுதிகளை பேரலைகள் இதற்கு முன் தாக்கியதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா!














Click it and Unblock the Notifications