For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ் பத்திரிகையாளர் கொலை: ரனில் விக்கிரமசிங்கே கட்சி கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் தமிழ் பத்திரிகையாளர் சிவராம் தர்மரத்தினம் கொல்லப்பட்டதற்கு முக்கிய எதிர்க்கட்சியான ரனில்விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மூத்த தமிழ் பத்திரிகையாளரான சிவராம் தர்மரத்தினம், கடந்த வியாழக்கிழமையன்று கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு இலங்கையில் பலரும் கடும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைக் கண்டித்துகொழும்பில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இந் நிலையில் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ரனில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி சிவராமின் கொலைக்குகடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜி.எல். பெரிஸ் கூறுகையில், இலங்கையில்சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாகி விட்டது.

இதற்கு சமீபத்தில் நடந்த தமிழ் பத்திரிகையாளர் சிவராமின் கொல்லப்பட்டதே ஒரு உதாரணமாகும். சிவராமின் கொலைக்குசந்திரிகா அரசு தான் காரணம்.இதற்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X