ரூ. 9,990க்கு கம்ப்யூட்டர்: தயாநிதி மாறன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரூ. 9990 கொடுத்து கம்ப்யூட்டர் வாங்கும் முறை இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் திங்கள்கிழமை முதல்அமலுக்கு வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன்தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட தயாநிதி மாறன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 10,000ரூபாய்க்கு கம்ப்யூட்டர் வாங்கும் நிலையைக் கொண்டு வர வேண்டும் என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்கொள்கையாகும். அந்த நோக்கம் தற்போது நிறைவேறப் போகிறது.இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9990 கொடுத்து கம்ப்யூட்டர் வாங்கும் முறை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்குவருகிறது. தனியார் நிறுவனம் ஒன்று இந்த விலைக்கு கம்ப்யூட்டர்களை சென்னையில் விற்பனைக்கு விடுகிறது.
இதையடுத்து அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) இன்டர்நெட் இணைப்புகளுக்கான கட்டணம் ஆகஸ்ட் முதல்வாரத்தில் வெகுவாக குறைக்கப்படவுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் ஒரே கட்டணத்தில் தொலைபேசியில் பேசும்வசதியையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications