தேசிய கொடியை எரிக்க போவதாக மிரட்டிய தலித் தலைவர்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தேசியக் கொடியை தீ வைத்து எரிப்பேன் என்று மிரட்டிய மதுரை மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவரைபோலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக இருப்பவர் நாகராஜ சோழன். இவர் பேரையூர் தாலுகாவுக்குஉட்பட்ட மல்லபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் கியூ பிரிவு போலீஸாரைத்தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.அப்போது, மதுரையிலிருந்து பாப்பாபட்டி, கீரிப்பட்டிக்கு நடைபயணம் மேற்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சிக்குஅனுமதி தர அரசு மறுத்துள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்து தேசியக் கொடியை தீவைத்து எரிக்கப்போவதாக மிரட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து நாகராஜ சோழனைக் கைது செய்ய போலீஸ் படை அவரது கிராமத்திற்கு விரைந்தது. ஆனால்அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
தலைமறைவாகி விட்ட அவரைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications