அவசரமாய் பொதுக்குழுவை கூட்டுகிறார் வைகோ
சென்னை:வரும் 25ம் தேதி மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை அக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூட்டியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீட்கவும், காக்கவும் வலியுறுத்திமதுரையிலிருந்து கூடலூர் வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார் வைகோ. இந் நிலையில் கட்சியில் பிளவுஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
![]() |
இந் நிலையில் மதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு, அரசியல் விவகாரக் குழு, ஆட்சிமன்றக் குழு உள்ளிட்ட முக்கியக் குழுக்களின் கூட்டம் 25ம் தேதி சென்னையில் உள்ளகட்சியின் தலைமையகமான தாயகத்தில் நடைபெறும் என வைகோ இன்றுவெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், அதிருப்தி அவைத் தலைவர் எல்.கணேசன் நாளை முதல் தமிழகம்முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனைநடத்துகிறார்.
முன்னதாக ஆண்டிப்பட்டியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ,
நான் மேற்கொள்ளும் 5வது நடைப்பயணம் இது. மதிமுக ஆரம்பித்தபோது 52 நாட்களில் 1,600 கிலோமீட்டர்தொலைவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டேன். பின்னர் நதிகள் இணைப்பை வலியுறுத்தி 42 நாட்களில் 1,200கிலோமீட்டர் தொலைவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டேன்.
காவிரி நதிப் பிரச்சினைக்காக காவிரிப் பூம்பட்டணத்திலிருந்து கல்லணை வரை 200 கிலோமீட்டர் தொலைவுக்குநடைப்பயணம் மேற்கொண்டேன்.
பின்னர் ஸ்டெரிலைட் பிரச்சினைக்காக ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தூத்துக்குடி வரை 100 கி.மீ தூரத்திற்குநடைப்பயணம் மேற்கொண்டேன்.
இந்த நடைப்பயணம் மூலம் மக்களை நேரடியாக தேடிச் செல்கிறேன். மக்களை சந்திக்கவே இந்த நடைப்பயணம்.முல்லைப் பெரியாறு நடைப்பயணத்திற்கு எதிர்பார்த்ததை விட பல மடங்கு உற்சாக வரவேற்பை பொதுமக்கள்தருகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் நடந்த பிரச்சினைகள் குறித்து (எல்.ஜி. விவகாரம்) தெரிந்து கொள்ளபத்திரிக்கையாளர்களும், மற்றவர்களும் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். நான் ஏதாவது பேசுவேன் என்றுஎதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் நான் பேச மாட்டேன். அப்படிப் பேசினால் எனது நடைப் பயணத்தின் நோக்கம் திசை திரும்பி விடும்.எனது நோக்கம் பெரியாறு அணை உரிமை மீட்பு நடைப்பயணத்தை திட்டமிட்டபடி முடிப்பதுதான்.
எனது நோக்கத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால் என்னை திசை திருப்ப முடியாது. எனது கவனத்தைவேறு பக்கம் திரும்பவும் விட மாட்டேன்.
இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்களை 6 நாள் கழித்துப் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆவேசமாககூறினார் வைகோ.
ஆனால், அதற்குள் எல்.ஜி. தனது மாவட்ட சுற்றுப் பயணத்தை ஆரம்பித்து கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்துதன் பக்கம் இழுத்துவிடுவார் என்ற அச்சம் நிலவுவதால், தான் விதித்துக் கொண்ட 6 நாள் கெடுவை தானாகவேவிலக்கிக் கொண்டுவிட்டார் வைகோ.
25ம் தேதி சென்னைக்கு வந்து பொதுக் குழுக் கூட்டத்தை நடத்திவிட முடிவு செய்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications