பிரேமானந்தாவின் நிலத்தை ஏழைகளுக்கு வழங்க அரசு திட்டம்?
புதுக்கோட்டை:தமிழக அரசின் இலவச நிலத் திட்டத்தின் கீழ் செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவுக்குச் சொந்தமான நிலத்தைப் பிரித்து, ஏழை விவசாயிகளுக்குக் கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
செக்ஸ் சாமியார் பிரேமானந்தா கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் சிக்கி இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். கடலூர் மத்திய சிறையில் அவர் அடைபட்டுள்ளார்.
![]() |
அவரது சகோதரி பாலா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரைப் பார்க்க பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்ற உயர்நீதிமன்றம், 6 நாள் பரோல் கொடுத்தது.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தனது ஆசிரமத்திற்கு வந்தார் பிரேமானந்தா. அவருக்கு ஆசிரம ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் வரவேற்பு அளித்தனர்.
அவர் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகள் ஆசிரமத்தில் புகுந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
திருச்சி நில சீர்திருத்தத் துறை உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் தலைமையிலான குழு இந்த சோதனையில் ஈடுபட்டது.
இந்த சோதனை குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் பிரேமானந்தா ஆசிரத்தின் 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பாகத்தான் இந்த சோதனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதிகாரிகளில் இன்னொரு பிரிவினர் வேறு மாதிரியான தகவலைத் தெரிவித்தனர்.
அதாவது தமிழக அரசின் இலவச நிலத் திட்டத்திற்காக பிரேமானந்தாவின் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாம்.
பிரேமானந்தாவின் ஆசிரமம் 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதேபோல விராலிமலை-திண்டுக்கல் சாலையில் 100 ஏக்கர் நிலம் பிரேமானந்தா ஆசிரமத்திற்குச் சொந்தமாக உள்ளது.
விராலிமலை ஆசிரமத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ள 20 ஏக்கர் நிலத்தை பிரித்து ஏழை விவசாயிளுக்கு கொடுக்கப் போகிறார்கள்.
அதேபோல திண்டுக்கல் சாலை நிலத்தையும் கையகப்படுத்தும் திட்டம் அரசிடம் உள்ளதாம். அதற்காகத்தான் இந்த சோதனை நடத்தப்பட்டது என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications