மனிதனை விட மண்ணுக்கே மரியாதை- தா.பாண்டியன் வேதனை
திருநெல்வேலி
மனிதனுடைய உயிருக்கு கிடைக்கும் மரியாதையைவிட மணலுக்கு தான் அதிக மரியாதை கிடைக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் நெல்லை மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் சுடலைமுத்து கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பொதுக் கூட்டம் நடந்தது.
இதில் தா.பாண்டியன் பேசுகையில், தாமிரபரணியில் நடக்கும் மணல் கடத்தல் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நெல்லை மாவட்ட செயலாளர் சுடலைமுத்து கடந்த மாதம் வீரவநல்லூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது வன்மையாக கண்டிக்கதக்கது. சிறைகளுக்கு என்று தனி விதிகள் உள்ளன. 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை பெற்ற காலத்தில், முதல் 14 மாதங்கள் பரோலில் வர அனுமதி கிடையாது. ஆனால் சுடலைமுத்து கொலை தொடர்பாக தண்டனை பெற்று சிறையில் இருந்தவர் ஒரே மாதத்தில் பரோலில் வெளியே வந்தது காவல்துறையின் அக்கறையின்மையை காட்டுகிறது.
சுடலைமுத்து கொலையில் தொடர்புடையதாக 12 பேரின் பெயர்களை சாட்சியான நாகராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் 4 பேர் மட்டுமே போலீசாரால் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே சுடலைமுத்துவின் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மனிதனை விட மணலுக்குதான் மரியாதை. மணல் கொள்ளைக்கு எதிராக போராடிய சுடலை முத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தேசிய நிர்வாக குழு உறுப்பினர் நல்லக்கண்ணு பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் அரிகேசவநல்லூர் பஞ்சாயத்தில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அயூப்கான் மட்டும் உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.
அயூப்கானுடன் சேர்ந்து போராடிய தலித் சமூகத்தை சேர்ந்த சுடலைமுத்து கொலை செய்யப்பட்டதன் மூலம் அரசின் கொள்கை கொல்லப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் இன்னமும் மணல் கொள்ளை நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. பதவியேற்ற சில நாட்களிலேயே சேரன்மாதேவி சப்-கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். வருவாய்த் துறையினர் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மணல் கொள்ளை நடப்பதற்கு இதுவே சாட்சி.
நெல்லை அருகே ஓமநல்லூரில் மணல் கொள்ளைக்கு எதிராக போராடிய விவசாயிகள், ஏழை எளிய மக்கள் 56 பேர் மீது அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மக்களுக்காக நல்லாட்சி செய்வதில் கருணாநிதி உறுதியாக இருப்பது உண்மையென்றால் அவர்கள் மீது போட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications