லஞ்சம்-மதுரை போலீஸ் உதவி கமிஷ்னர் கைது

Subscribe to Oneindia Tamil


மதுரை:

லஞ்சம் வாங்கிய மதுரை காவல்துறை உதவி ஆணையாளரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்.

Vivekanandanமதுரை அண்ணாநகர் பகுதியில் கார் நிறுவனம் வைத்து நடத்தி வருபவர் காதர்பாய். இவரிடம் தாமோதரன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் வாங்கியுள்ளார்.

ஆனால் காருக்கான முழு பணத்தையும் தரவில்லையாம். காதர்பாய் அடிக்கடி தாமோதரனிடம் பணம் கேட்டும் கிடைத்தபாடு இல்லை. இதையடுத்து தல்லாகுளம் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் விவேகானந்தனிடம் புகார் தெரிவித்துள்ளார்.

காதர்பாய் கொடுத்த புகாரை விசாரித்து தாமோதரனிடம் பணத்தை திரும்ப பெற்றுத்தர லஞ்சமாக தனக்கு பணம் ரூ. 15,000 கொடுக்க வேண்டும் என விவேகானந்தன் கூறியுள்ளார்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார் காதர். லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி ரூ. 15,000 பணத்தை நேற்று நள்ளிரவு விவேகானந்தனிடம் கொடுத்தார்.

அதை அவர் வாங்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர். மேலும் அவரது வீடு, அலுவலகம் ஆகியவற்றில் சோதனையிட்ட போலீசார் பல ெசாத்துக்களின் ஆவணங்களை கைப்பற்றினர்.

விவேகானந்தன் சென்னையில் பணியாற்றியபோது பல முறை லஞ்ச சிக்கியவர் என்பது குறிப்பிடத்க்கது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடியில் சிக்கிய தல்லாகுளம் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் விவேகானந்தனை மதுரை டிஐஜி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+