For Daily Alerts
Just In
போலி ஆவணம்-திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் போலீஸ் சோதனை
திருச்சி:
போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் வாங்க முயன்றது தொடர்பாக திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர் ஒரத்தநாட்டைச் சேர்ந்த தஸ்லீம் மரியம் என்பவர் போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற முயன்றதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இவரது ஆவணங்கள் போலி என்று தெரிந்தும் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கியதாக திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக தஸ்லீமிடம் இவர்கள் லஞ்சம் வாங்கியதும் தெரியவந்தது.
இந் நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகத்தில் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தி ஆவணங்களை பரிசோதித்தனர். இது தொடர்பாக மேலும் சிலரும் கைதாகலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Story first published: Saturday, December 15, 2007, 21:25 [IST]