தஞ்சாவூர்-விபத்தில் கர்நாடக நீதிபதி காயம்-2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே நடந்த சாலை விபத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த மாவட்ட நீதிபதி ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் இறந்தனர்.

கர்நாடகா மாநிலம், கோலாரைச் சேர்ந்தவர் பாலகோபாலகிருஷ்ணன். இவர் மாவட்ட நீதிபதியாக இருக்கிறார். இவருக்கு தேகவதி (35) என்ற மனைவியும், வருண் (3) என்ற மகனும் உள்ளனர்.

இவர் தனது குடும்பத்துடன் இன்று காலை அரசுப் பேருந்தில் தஞ்சாவூருக்கு சென்றார். அப்போது திருக்கானூர்பட்டி அருகே எதிரில் வந்த லாரி மீது பேருந்து மோதியது.

இதில் நீதிபதி பாலகோபாலகிருஷ்ணன் படுகாயமடைந்தார். அவரது மனைவியும், மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

காயமடைந்த பாலகோபாலகிருஷ்ணன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+