பாலுவோடு என்னை மோதவிட ஜெ. முயற்சி: வாசன்
மதுரை: தமிழகத்தில் எக்காலத்திலும் வன்முறை கலாச்சாரத்தை அனுமதிக்க முடியாது, தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை தாக்கியவர்களை உடனை போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் மத்திய திட்ட அமலாக்கல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மர்ம கும்பலால் வேல் கம்பால் குத்தப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணசாமியை சந்தித்து நலம் விசாரித்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,
கிருஷ்ணசாமி உடல்நிலை தேறி வருகிறது. தமிழ்நாட்டில் வன்முறை கலாச்சாரத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்தத் தாக்குதலில் தொடர்புடைய கும்பலை அடையாளம் கண்டு, உடனே கைது செய்ய வேண்டும். பதட்டமான பகுதிகளுக்கு அரசியல் தலைவர்கள் செல்கிறபோது போலீசார் தகுந்த பாதுகாப்பு கொடுப்பது நல்லதாகும்.
சேது சமுத்திர திட்டம் என்பது தமிழக மக்களின் நீண்ட நாள் கனவாகும். கடலோர மக்கள் இந்தத் திட்டத்தால் பெரும் பயன் அடைவார்கள். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும், நாட்டின் பெருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும். ஆனால் இந்தத் திட்டத்துக்கு பாரதிய ஜனதா கட்சியும், அதிமுகவும் முட்டுக் கட்டையாக உள்ளன.
அமலாக்கத்துறை வெளியிட்ட அறிவிப்பு என்று ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் சேது சமுத்திர திட்டப்பணி 15 சதவீத அளவே முடிந்துள்ளதாக திட்ட அமலாக்கள் துறை கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒரு விவரத்தை திட்ட அமலாக்கத் துறையோ, புள்ளியியல் துறையோ இப்போது வெளியிடவே இல்லை. பழைய தகவல்களின் அடிப்படையில் இது போன்ற வெட்டி அறிக்கையை வெளியிடுவது முன்னாள் முதலமைச்சரான ஒருவருக்கு அழகல்ல.
இது பொதுமக்களை திசை திருப்புகின்ற முயற்சி, இது நல்லதல்ல.
மத்தியில் இருவேறு துறைகளை சேர்ந்த அமைச்சர்களை (பாலுவையும் தன்னையும்) மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறார் ஜெயலலிதா. அது ஒருபோதும் நடக்காது. மத்திய, மாநில அரசுகள் சேது சமுத்திர திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றும்.
சேது சமுத்தி திட்டத்தால் தென்மாவட்ட மக்கள் நல்ல பலனடைவார்கள். ஜாதி, மதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் பயனடைவார்கள். எனவே இந்த திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
பிற மாநிலங்களை போல இல்லாமல் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்றார் வாசன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications