கரூரில் அதிமுகவினர் ரோட்டை மறித்து உண்ணாவிரதம்
கரூர்: கரூரில் மோசமான நிலையில் உள்ள அமராவதி நதியின் குறுக்கே உள்ள பாலத்தை சீர் செய்யக்கோரி அதிமுகவினர் ரோட்டை மறித்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
கரூரில் அமராவதி நதியின் குறுக்கே பாலம் கட்ட 1998ம் ஆண்டில் ஆட்சி பொறுப்பில் இருந்த திமுக அரசு அனுமதி அளித்ததது. இதற்கான ஒப்பந்தம் இசிசிஐ என்னும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ரூ. 13 கோடியில் கட்டுமான பணிகள் முடிந்து 2000ம் ஆண்டு இப் பாலம் திறக்கப்பட்டது.
அமராவதி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் புதிய பாலம் 2005 நவம்பர் 24 ம்தேதி பழுதடைந்தது. பாலம் கட்டுமானத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அது குறித்து விசாரிக்க அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா உத்தரவிட்டார்.
2005ம் ஆண்டு பாலத்தை பார்வையிட்ட நிபுணர்குழு அறிக்கை அடிப்படையில் பாலத்தை டிசம்பர் 19ம் தேதி அரசே ஏற்று சுங்கவரியை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும் பாலத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சி துறை அமைச்சர் கோசி மணி, உயர் அதிகாரிகள் மீது செண்னை சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடந்தது. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு அந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் அளித்த அறிக்கையின் படி அரசு ரத்து செய்தது.
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றும் 18 மாதங்கள் ஆகியும் கரூரில் அமராவதி பாலத்தை சீர் செய்யவில்லை என கூறி அதிமுக சார்பில் இன்று காலை முதல் கரூர் தாலுகா அலுவலகம் முன்பாக முன்னாள் அமைச்சர் சின்னசாமி தலைமையில், கரூர் மாவட்ட செயலாளரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
உண்ணாவிரதத்தில் இளைஞர்அணி மாவட்டசெயலாளர் கரூர் நாகராஜன், மாணவர் அணி மாவட்ட செயலாளர் மெட்ரோ பிரபு, அரசு காலனி செயலாளர் காலனி சேகர், முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
தாலுகா அலுவலகம் முன்பு ரோட்டை மறித்து உண்ணாவிரத பந்தல் போடப்பட்டு உள்ளதால் அந்த வழியாக மக்கள் செல்ல முடியாமல் மாற்று வழியில் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications