அமைதிக்காக காத்திருக்கும் அயோத்தி!!
அயோத்தி: பாபர் மசூதி, ராமர் கோவில் ஆகிய பிரச்சினைகளை வைத்து அரசியல்வாதிகள் செய்து வரும் அரசியல் விளையாட்டால் அயோத்தி மக்கள் பெரும் விரக்தி அடைந்துள்ளனர். என்று அயோத்தியில் அமைதி திரும்புமோ என்ற பெரும் எதிர்பார்ப்பில் அவர்கள் அமைதிக்காக காத்திருக்கின்றனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகி விட்டன. மசூதி இருந்தபோதும் பிரச்சினை, மசூதியை இடித்த பிறகும் தொடரும் பிரச்சினை என்று அயோத்தி ரண பூமியாகவே நீடிப்பது அயோத்தி மக்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தியாவின் இதர பகுதிகளில் வாழும் மக்களைப் போல நாங்களும் அமைதியுடனும், நிம்மதியுடனும் வாழ வேண்டும். மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று அயோத்தி மக்கள் விரும்புகின்றனர்.
முகம்மது ஜமீல் அகமது என்பவர் கூறுகையில், ஊரடங்கு உத்தரவுகள், சாலை மறியல்கள், தடியடிகள் எங்களது தினசரி வாழ்க்கையாகி விட்டது. இது எங்களின் தலைவிதி.
எங்களுக்குத் தேவை பிரச்சினை அல்ல, அமைதியான வாழ்க்கைதான். அமைதியான முறையில், எந்தவித வன்முறையும் இல்லாத சூழலில் வாழ நாங்கள் விரும்புகிறோம். இங்கு வசித்து வந்த முஸ்லீம் மதத்தினர் பலர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். அந்த நிலை மாற வேண்டும் என்றார் அவர்.
ராப்ரி என்ற பெண்மணி கூறுகையில், அயோத்தியில் நடந்த கலவரத்தில் எனது கணவர் கொல்லப்பட்டு விட்டார். இருந்தாலும் இந்த இடத்தை விட்டுப் போக எனக்கு விருப்பம் இல்லை. இங்குள்ளவர்கள் எனது கணவரைக் கொல்லவில்லை. எங்கிருந்தோ வந்தவர்கள்தான் அவரைப் போன்ற பல அப்பாவிகளைக் கொன்று விட்டனர்.
இங்குள்ள மக்கள் நல்லவர்கள், அமைதி விரும்பிகள். நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். எனக்கும், எனது ஐந்து குழந்தைகளுக்கும் இங்குள்ள மக்கள் நல்ல பாதுகாப்பாக உள்ளனர். இந்துக்கள்தான் எனது குழந்தைகளை காப்பாற்றியவர்கள்.
விரைவில் இங்கு அமைதி திரும்ப வேண்டும். இனிமேலும் இங்கு வன்முறை கூடாது. விரைவில் சுமூக நிலை திரும்பும், நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்திக் கொண்டுள்ளோம் என்றார் அன்வாரி.
'அரசியல் பிழைப்பாளர்களின்' காதுகளை இந்த அப்பாவிகளின் எதிர்பார்ப்பு வார்த்தைகள் சென்றடையுமா?
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications