ஈழத் தமிழர்களுக்காக சிறை செல்லத் தயார் - திருமாவளவன்
சென்னை: விடுதலைச் சிறுத்ைதகளுக்கு சிறைவாசம் புதிதல்ல. சிறுத்ைதகள் ஓய்வெடுக்கும் குகைதான் சிறை. ஈழத் தமிழர்களுக்காக சிறை செல்லத் தயார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்திய அரசின் சமூக நீதித்துறை, தாழ்த்தப்பட்ட மாணவர் கல்வி உதவித் தொகை மற்றும் கடன் உதவி தொகை பெற அரசு ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும் எனவும், கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையே கிடையாது எனவும் அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இது தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான விரோத செயல். அந்த அரசு ஆணையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அவ்வாறு திரும்ப பெறவில்லை என்றால் தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் ரயில் மறியல் நடத்தப்படும்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற கருத்துரிமை மாநாடு திமுக அரசுக்கு நெருக்கடி தந்திருப்பதாக கூறுவது தவறு. அதிமுகவினரின் அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரசார் துணை போகக் கூடாது.
இலங்கை அரசின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடியதாக இந்திய அரசு உள்ளது. அதனால் இலங்கை அரசு கட்சத்தீவுகள் அருகே கடலில் கண்ணி வெடிகளை மிதக்க விட்டுள்ளனர். இதனால் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
வருகின்ற 22ம் தேதி தமிழக அரசின் அம்பேத்கர் விருது நல்லக்கண்ணுவுக்கு பாராட்டு விழாவும், கலைஞர்கள் நன்றி தெரிவிக்கும் விழாவும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சென்னையில் நடத்த திட்டமிட்டு உள்ளோம். வருகின்ற மார்ச் மாதம் 10ம் தேதி மதுரையில் மகளிர் விடுதலை என்ற தலைப்பில் மகளிருக்கான மாநாடு நடத்தப்படும்.
ஈழ தமிழர்களுக்காக கண்டனமும், இரங்கலும் தெரிவிக்க எங்களுக்கு உரிமை உண்டா, இல்லையா என்று தெரியவில்லை.
விடுதலை சிறுத்தைகளுக்கு சிறைவாசம் என்பது புதிதல்ல. சிறை என்பது விடுதலை சிறுத்தை ஓய்வு எடுக்கும் குகை என்றார் திருமாவளவன்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications