நகைக் கடையில் கொள்ளை-நாடோடி கும்பல் கைவரிசை
காரைக்குடி: காரைக்குடியில் நகைக் கடையில் பெரிய ஓட்டை போட்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
காரைக்குடி அருகில் உள்ள புதுவயலில் ஒரு பிரபல நகைக்கடை உள்ளது. இந்த நகைக் கடையை காலையில் அதன் உரிமையாளர் திறந்தபோது பின் பக்க சுவரில் பெரிய ஓட்டை இருந்தது.
கடையில் இருந்த ரூ. 7 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் திருடப்பட்டிருந்தன.
தகவல் அறிந்த காரைக்குடி போலீசார் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர்.
மோப்ப நாய் ஓடி ரோட்டோரம் வசித்து வரும் நடோடி கூட்டத்தினர் வசிக்கும் கூடாராம் அருகே சென்று நின்றது.
இதனால் அந்த நாடோடி கும்பல் மீது போலீஸ் பார்வை திரும்பியது. இதனால் அந்த நாடோடி கும்பலில் சந்தேகத்திற்கு உரியவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே கடந்த சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் ஒரு நகைக் கடையில் இதே முறையில் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications