சரிகா ஷா கொலை வழக்கில் 9 பேருக்கு சிறைத் தண்டனை உறுதி
சென்னை: ஈவ் டீசிங்கில் சென்னை மாணவி சரிகா ஷா கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னை சவுகார்பேட்டையில் வசித்து வந்தவர் சரிகா. இவர் எத்திராஜ் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 1998ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி கல்லூரி முடிந்து வீடு திரும்ப வெளியே வந்தார்.
அப்போது ஆட்டோவில் வந்த ஒரு காலிக் கும்பல் சரிகா ஷா மீது தண்ணீரை பீய்ச்சியடித்து கலாட்டா செய்தனர். அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க ஓடியபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார் சரிகா ஷா.
தமிழகத்ைத பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் அப்பகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹரி, புகழேந்தி, பிரபுதாஸ், வினோத், ஸ்ரீதர், இன்னொரு ஸ்ரீதர், பன்னீர் செல்வம், சரவணன், முருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ஆனால் அத்தனை பேரும் பின்னர் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.
இவர்கள் மீது சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. 2001ம் ஆண்டு 9 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து 9 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் விசாரித்தார். இதில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி, குற்றவாளிகள் 9 பேருக்கும் விதிக்கப்பட்ட தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
தனது தீர்ப்பில் நீதிபதி கிருஷ்ணன் கூறுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவது வேதனை தரக்கூடியது. 9 பேரும் ஈவ்டீசிங் செய்ததாலேயே மாணவி சரிகாஷா பலியாகி உள்ளார்.
எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்கிறேன்.
இந்த வழக்கில் அரசுக்கு சில பரிந்துரைகளை சொல்ல விரும்புகிறேன்.
பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் கேலி-கிண்டலில் இருந்து தப்பிக்க சில வழி முறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும், பள்ளி, கல்லூரி பாடங்களில் தன்னம்பிக்கை, மன வலிமையை ஏற்படுத்தும் வகையில் வகுப்புகளை நடத்த வேண்டும். இதற்காக அரசு பாடம் கொண்டு வர வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் வந்தால் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நீதிபதி.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications