'கேப்டன்' பண்ணை வேலி அகற்றம்!: நிலம் கையகம்; அதிகாரிகள் அதிரடி!

மதுராந்தகம் அருகே விஜயகாந்த்துக்குச் சொந்தமான கேப்டன் பண்ணை உள்ளது. 400க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த நிலத்தில், 28 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக ஆய்வு நடத்திய வருவாய்த்துறை அதிகாரிகள், விஜயகாந்த் நிலத்துடன் ஆக்கிரமிப்பு நிலவும் இருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து மதுராந்தகம் தாசில்தார் நடராஜன், விஜயகாந்த்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
தாசில்தார் கொடுத்த காலத்திற்குள் விஜயகாந்த் நிலத்தை ஒப்படைக்கவில்லை. மேலும், கால அவகாசம் தேவை என்று கூறி தனது வக்கீலை தாசில்தாரிடம் அனுப்பி வைத்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த தாசில்தார் நடராஜன், இறுதி நோட்டீஸை விஜயகாந்த்துக்கு அனுப்பினார்.
இதனால் எந்த நேரமும் விஜயகாந்த் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியை அதிகாரிகள் தொடங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை போலீஸாருடன் கேப்டன் பண்ணைக்கு தாசில்தார் நடராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனர்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை கையகப்படுத்த வேண்டும், கேப்டன் பண்ணை நுழைவாயிலைத் திறந்து விடுங்கள் என அங்கிருந்தவர்களிடம் கூறினார். ஆனால் கேட் சாவியைத் தருவதில் விஜயகாந்த் தரப்பு காலதாமதம் செய்ததால், பொக்லைன் எந்திரத்தை வரவழைத்த அதிகாரிகள், அதிரடியாக மின் வேலியை தகர்த்து உள்ளே புகுந்தனர்.
மின் வேலி முழுவதையும் அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன் பின்னர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் தனியாக பிரிக்கப்பட்டு கையகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
விஜயகாந்த் நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள் மற்றும் போலீஸார் குவிந்திருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications