எறையூரில் பாதிரியார்கள் முகாம்-மதமாற்றத்தைத் தடுக்க தீவிர முயற்சி

எறையூர் கிராமத்தில் வன்னிய கிறிஸ்தவர்களுக்கும், தலித் கிறிஸ்தவர்களுக்கும் சமீபத்தில் பெரும் மோதல் ஏற்பட்டது. மோதலை அடக்க போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் தலித் பிரிவைச் சேர்ந்த தெரசம்மாள் என்பவர் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடலை பொதுப் பாதையில், சவ வண்டியில் வைத்து கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
இதற்கு வன்னிய கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பு ெதரிவித்தனர். இந்த நிலையில் வன்னிய பிரிவைச் சேர்ந்த சர்க்கரையாஸ் என்பவர் இறந்தார். அவரை தலித் பிரிவினர் பயன்படுத்திய வண்டியில் கொண்டு செல்லாமல், சவப் பெட்டியைத் தூக்கியபடியே சென்று அடக்கம் செய்தனர்.
மேலும், தங்களையும், தலித் கிறிஸ்தவர்களையும் தனியாகப் பிரித்து தனிப் பங்கு அமைக்க வேண்டும். இரு பிரிவினருக்கும் தனித் தனியாக சர்ச்சுகள் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏப்ரல் 1ம் தேதி 20 ஆயிரம் கிறிஸ்தவ வன்னியர்களும் மதம் மாறுவோம் என்றும் அறிவித்தனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் விவாகரத்தை பெரிதாகாமல் தடுக்கவும், மதமாற்ற முயற்சிகளை தடுக்கும் முகமாகவும், புதுச்சேரியிலிருந்து நான்கு பாதிரியார்கள் அடங்கிய குழு எறையூர் வந்தது.
இந்தக் குழுவில் வன்னிய கிறிஸ்தவப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினர். இருப்பினும் இதில் உடன்பாடு ஏற்பட்டதா, இல்லையா என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை.
ஒரே கடவுள் இயேசு-கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம்:
இதற்கிடையே, தலித் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, வன்னிய கிறிஸ்தவர்களாக இருந்தாலும் கடவுள் ஒருவர், இயேசு கிறிஸ்து முன் அனைவரும் சமம். இதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது என்று கிறிஸ்தவ முன்னேற்றக் கழகத் தலைவர் ஜோசப் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எறையூரில் உள்ள வன்னிய கிறிஸ்தவர்களில் 37 பேர் பாதிரியார்கள், 127 பேர் கன்னியாஸ்திரிகள்.
அனைவருமே இறை நம்பிக்கை கொண்டவர்கள். கிறிஸ்தவம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். மன உளைச்சலால் மத மாற்ற முடிவை அவர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் உளப் பூர்வமாக அவர்கள் அந்த முடிவை எடுத்திருக்க மாட்டார்கள். எனவே நிச்சயம் அவர்கள் மதம் மாற மாட்டார்கள்.
இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்ைக உள்ளது என்று கூறியுள்ளார்.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications