'சேது' வழக்கு-அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு
டெல்லி: சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா சார்பிலான வக்கீல் வேணுகோபால ராவ் வாதாடினார். விவாதம் முடியாததால் அடுத்த வாரத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான மனுக்கள் மீது இன்று இறுதி விவாதம் நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன், பன்சால் ஆகியோர் முன்னிைலயில் விவாதத்திற்கு வந்தது.
அப்போது தண்டி சுவாமி, ஜெயலலிதா ஆகியோர் சார்பில் ஆஜராகிய வேணுகோபால ராவ் வாதாடினார். அவர் வாதிடுகையில், இந்திய தொல்துறை ஆய்வுக்கு உட்படுத்தாமல் ராமர் பாலத்ைத இடிக்க முடியாது. அது ராமரால் கட்டப்பட்டதோ அல்லது இயற்கையாக உருவானதோ, தொல்பொருள் துறை ஆய்வின் மூலம் தான் அதைக் கண்டறிய முடியும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக மத்திய அரசு இந்த சோதனைக்கு முன்வர மறுக்கிறது. ஆனால் சேது சமுத்திரத் திட்டத்திற்காக மக்களின் வரிப்பணத்தில் ரூ. 2400 கோடியை வாரி இறைத்திருக்கிறது.
சேது சமுத்திரத் திட்டத்தின்படி கால்வாயின் நீளம் 270கிலோமீட்டராகும். இதில் ராமர் பாலத்தின் நீளம் 31 மீட்டர்.
ராமர் பாலத்தை இடிப்பதற்கு முன்பு, அது இயற்கையானதுதான், மனிதரால் கட்டப்பட்டதல்ல என்பதை அறிவியல்பூர்வமாக விளக்க
வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது.
பூகோளவியல் ஆய்வுக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டதுதான் என்று கூறியுள்ளார். இதை அரசு புறக்கணித்துள்ளது என்றார்.
இன்றைய விவாதம் முடிவடையாததால் வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications