For Daily Alerts
Just In

தமிழகத்தில் அனல் காற்று தொடரும்
சென்னை: தமிழகத்தை வெயிலும் அனல் காற்றும் கடந்த 2 தினங்களாக வருத்தெடுத்து வருகிறது. இந்நிலையில் அனல் காற்று அடுத்த 2 நாட்களுக்கு அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 3ம் தேதி தொடங்கியது. ஆனால் அதற்கு முன்னரே சென்னை உள்பட தமிழகத்தை வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியது.
இந்நிலையில் கடந்த 2 தினங்களாக வெயிலோடு அனல் காற்றும் வறுத்தெடுத்து வருகிறது.
இந்நிலையில் அனல் காற்று மேலும் 2 நாட்களுக்கு சற்று கூடுதலாகவே இருக்கும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நாளை வெயில் 43 டிகிரி செல்சியசஸை தொடுமாம். கடற்கரை பகுதிகளில் அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
Comments
Story first published: Monday, May 5, 2008, 18:01 [IST]