ஒரு அடேங்கப்பா ஐ.ஏ.எஸ்!
ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரி, பொதுமக்களுக்கு அரசியல் 'சேவை' செய்ய தன்னைப் பதவியிலிருந்து விடுவிக்குமாறு கேட்டு மத்திய நிர்வாகத் தூறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதிலென்ன ஆச்சர்யம் என்கிறீர்களா?
இப்படி பணியிலிருந்து விடுவிக்க இவர் அபராதத் தொகையாக ரூ.20.60 லட்சத்தை அரசுக்குச் செலுத்தியிருக்கிறார், அதுவும் ஒரே செக்காக!!.
ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த அந்த அதிகாரியின் பெயர் தெபாப்ரதா காந்தா. 1987 பேட்சை சேர்ந்த அதிகாரியான இவர் ஆந்திர மாநில அரசில் தற்போது சிறுபான்மை நலத் துறை ஆணையராகப் பதவி வகிக்கிறார்.
கடந்த 21 ஆண்டுகளாகப் பணியிலிருந்து வரும் இவர் கரீம் நகர் மாவட்ட கலெக்டராகவும் இருந்துள்ளார். ஐதராபாத்தின் செல்வச் செழிப்பான பகுதியான பிரகாசம் நகர் ஏரியாவில் இவருக்கு அரண்மனை மாதிரி சொந்த பங்களாவே உள்ளது.
அது சரி... எதற்காக பதவி விலகுகிறார், ஏன் இவ்வளவு பணத்தைக் கட்டுகிறார்?
இவரது சொந்த மாநிலமான ஒரிஸ்ஸாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜாஜ்பூர் தொகுதியில் போட்டியிடப் போகிறாராம். இத் தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்குத் தொண்டாற்றவே இந்த விலகலாம்.
கடந்த 2006ம் ஆண்டு இவர் அமெரிக்காவுக்குப் போய் மேக்ஸ்வெல் நிர்வாகப் பள்ளியில் எம்.ஏ. பொது நிர்வாகவியல் படித்தார். மத்திய அரசு இதற்காக செலவிட்ட தொகை ரூ. 20.60 லட்சம்.
ஒப்பந்தப்படி, அரசு செலவில் வெளிநாட்டுக்குப் போய் மேற்படிப்பு படிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள், படிப்பு முடிந்த பிறகு குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். இடையில் விலகினால், அரசு செலவிட்ட தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும்.
இந்த விதிக்குக் கட்டுப்பட்டுத்தான் தெபாப்ரதா காந்தா அபராதம் கட்டுகிறார். இவரது ராஜினாமா கடிதம் மற்றும் செக்கைப் பெற்றுக் கொண்ட மத்திய அரசு விரைவில் பணியிலிருந்து காந்தாவை விடுவிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியால் ஒரே தவணையில் இவ்வளவு பெரிய தொகையை எப்படிப் புரட்ட முடியும்?.
எனக்கு இந்தப் பணம் ஒரு பெரிய விஷயமே இல்லை. எப்படியாவது அரசியலுக்குப் போக வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதற்கு அடுத்த ஆண்டுத் தேர்தலை விட்டால் மீண்டும் 2014 வரை காத்திருக்க முடியாது... மக்கள் சேவை செய்வதுதான் எனது ஒரே குறிக்கோள், என்கிறார் காந்தா.
இது எப்டி இருக்கு!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications