நொய்டாவில் மேலும் ஒரு நிறுவன அதிகாரி மீது தாக்குதல்
நொய்டா: சில தினங்களுக்கு முன் கிரேட்டர் நொய்டாவில் இத்தாலி நாட்டு நிறுவன தலைமை ெசயலதிகாரி அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் அமெரிக்க நிறுவன சிஇஓ ஒருவர் நொய்டா பகுதியில் மர்ம கும்பலால் பயங்கரமாக தாக்கப்பட்டுள்ளார்.
டெல்லி அருகே உள்ள நொய்டா பகுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த எக்ஸ்பெடியன்ஸ் இ சொல்யூஷன்ஸ் இந்தியா லிட் என்ற ஐடி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக உள்ளார் கஷீர் த்விவேதி (37). அலுவலகத்துக்கு அருகிலேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு வேலை முடித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து சாய்பாபா கோவிலுக்கு புறப்பட்டார். வழியில் 4 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் இவரது காரை விரட்டி வந்தது. கஷீரின் காரை வழிமறித்துள்ளனர்.
காரில் இருந்து இறங்கி வந்த அந்த கும்பல், கஷீரை காரில் இருந்து வெளியே வரும்படி கூப்பிட்டுள்ளனர். இதனால் கஷீர் பீதியடைந்தார். அந்த கும்பல் கார் கதவை திறக்க முயன்றுள்ளது. அப்போது கார் கதவுகள் ஆட்டோமெட்டிகாக பூட்டிக்கொண்டன.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் இரும்பு கம்பிகளால் கார் கண்ணாடிகளை உடைத்து கதவை திறந்தது. காருக்குள் இருந்து கஷீரை தரதரவென வெளியே இழுத்து தள்ளியது.
பின்னர் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அவர்களது காருக்குள் அடைக்க முயன்றனர். காருக்குள் போகாமல் அவர்களோடு கஷீர் போராடினார். அவரது கூச்சலை கேட்டு அப்பகுதியினர் அங்கு குவிந்தனர்.
இதையடுத்து இரும்பு கம்பியால் கஷீரை பயங்கரமாக தாக்கிவிட்டு அந்த கும்பல் தப்பியது. இதில் கஷீர் மயக்கமடைந்தார். தகவலறிந்த அவரது மனைவி மது, கஷீரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கஷீர் கூறுகையில், அலுவலகத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. யாருடனும் சண்டை இல்லை. நான் எதற்காக தாக்கப்பட்டேன் என்பது தெரியவில்லை. அலுவலகம் செல்லவே எனக்கு பயமாக இருக்கிறது. இந்த பகுதியில் பாதுகாப்பு இல்லை என்றார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த திங்கள் கிழமையன்று கிரேட்டர் நொய்டா பகுதியில் இத்தாலி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான லலித் கிஷோர் சௌத்ரி (47) என்பவர், வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களால் கொலை செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன் இப்போது மீண்டும் ஒரு சிஇஒ தாக்கப்பட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications